Showing posts with label narenthira modi. Show all posts
Showing posts with label narenthira modi. Show all posts

Saturday, April 5, 2014

இந்தியாவுக்கு வாக்களிப்பீர்!


- ச திருமலை



அருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa

நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன. இவற்றை ஒரு விதமான அறிகுறியாக கருதிக் கொண்டு மோதிக்குச் செல்லும் இடமில்லமெல்லாம் வரலாறு காணாத கூட்டம் கூடுவதையும் மக்களிடம் பரவலாக இருக்கும் எதிர்பாப்புக்களையும் சேர்த்து நோக்கும் பொழுது இந்தக் கணிப்புகள் அனேகமாக சாத்தியமாகி விடும் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் உள்ளன.

மோதியின் வெற்றி அனேகமாக உறுதி செய்யப் பட்டு விட்டாலும் கூட இரண்டு பெரும் அச்சுறுத்தல்களை நம்மால் ஒதுக்கி விட முடியாது. அவை இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் அவர் உயிருக்கு இருக்கும் அபாயம். இரண்டாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின். 

இந்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் ரிமோட்டாக ஊடுருவி அதில் இடப் பட்டுள்ள ஓட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதை இந்திய கோர்ட்டுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் ஓட்டுப் பதியும் பொழுது ஒரு அச்சிட்ட ரசீதையும் அளிக்கும் விதமாக அந்த இயந்திரத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் வழக்கம் போலவே இந்தியக் கோர்ட்டுகளின் வழ வழா கொழ கொழா தீர்ப்புகளைப் போலவே அதை இந்தத் தேர்தலுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று உறுதியாக எந்தத் தீர்ப்பையும் வழங்காதபடியால் அதையே சாக்காகக் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டுப் பெட்டியில் மாற்றம் செய்வதற்கான நிதியை ஒதுக்காமல் இருந்து கொண்டது. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதே சந்தேகத்துக்குரிய இயந்திரங்களே மீண்டும் பயன் படுத்தப் படப் போகின்றன. அந்த மெஷின்களில் சில தொகுதிகளில் மாறுதல் செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து விடக் கூடிய அபாயகரமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அப்படி நடந்து விடாது என்பதை எவரும் உறுதியாகச் சொல்லி விட முடியாது. 

மோடியின் வெற்றியை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கம்னியுஸ்டு கட்சிகள் முதல் வெளிநாடுகள் வரை முயற்சி செய்து வருகின்றன. அவரை கொலை செய்தாவது அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரண் தப்பார், ஞாநி சங்கரன் போன்ற பத்திரிகையாளர் முதல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரை ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை இந்தியாவின் அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் மவுனமாக ஆதரித்தும் வருகிறார்கள். இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் வோட்டிங் மெஷின்கள் மூலமாக இந்தத் தேர்தலின் முடிவுகள் மாற்றப் படுவதற்கும் பெருத்த வாய்ப்புகள் உள்ளன.

இந்த இரு அச்சுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உண்மையான தேர்தல் நடந்து ஆண்டவன் அருளால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்கும் பட்சத்தில் பி ஜே பி மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது.

காங்கிரஸ், கம்னிய்ஸ்டு, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற சக்திகள், பாக்கிஸ்தான், சீனா, இந்திய மீடியாக்கள், முற்போக்கு சூடோ செக்குலார் அறிவு ஜீவிகள் போன்ற அனைத்து விதமான இந்திய விரோத நாசகார சக்திகளும் ஒற்றுமையாக எப்பாடு பட்டாவது மோடியை நிறுத்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்தியாவின் மக்கள் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை கொண்டு இத்தாலியக் கொள்ளைக் கும்பலின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மோடி தலமையிலான பி ஜே பி க்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே இந்திய விரோதிகளின் சதியை முறியடிக்கும். அதை இந்திய வாக்காளர்கள் செய்வார்களா? செய்வார்களா?

இந்தத் தொடரில் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்பதைச் சொல்லவிருக்கிறேன். அதற்கு முன்னால் நரேந்திர மோடி மீது அளவற்ற காழ்ப்புடனும் ஆழ்ந்த வெறுப்புடனும் இடதுசாரி அறிவு ஜீவிகளினாலும், மீடியாக்களீனாலும், இந்திய தேச விரோதிகளினாலும் வைக்கப் படும் சில விமர்சனங்களையும் விரிவாக அலசவிருக்கிறேன். நேரம் இருக்கும் பொழுதெல்லாம் தொடர்வேன். 

தொடரும்.......



Sunday, December 11, 2011

மோடியின் சாதனைகளும் முஸ்லீம்களின் மகிழ்ச்சியும்!



நாங்கள் 13.11.2011 மதியம் 12 மணிக்கு திரு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தோம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த பொழுது 'வணக்கம்' என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்த படியே வந்து கொண்டிருந்தார். 'ஸ்வாகதம்' என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அரிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது.

தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும் அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்போதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

மோடி "நீங்கள் உள்ளே வரும்போது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?" என்று கேட்டார். "நாங்கள், அப்படி எதுவும் இல்லை' என்றோம்.

ஆனால் 'என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அது தான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்" என்று விளக்கினார்.

ரயில் பயணத்தின் போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமான தெருவிளக்குகள் எரிவதைப் பார்க்க முடிந்தது. கார்களில் பயணிக்கும் போது, தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமாதாபாத்திலும், சூரத்திலும் நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், 'மோடியினால் தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்' என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும், நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், 'இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்.. நாங்கள் செய்த புன்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்..' என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உனர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, 'தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்' என்றார்.

-'டி வி' புகழ் வரதராஜன்

நன்றி:- இவ்வார துக்ளக்



இம்முறை ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டவர்களெல்லாம் அவரிடம் இத்தகைய ஒரு ஆட்சியை எதிர்பார்த்து தான் என்பதை ஜெயா உணர்வாரா?

Monday, November 15, 2010

சாதனையாளர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி!


நரேந்திர மோதி

அமைச்சர் ஆ.ராசாவை துறத்தாத குறையாக ஒரு வழியாக வெளியேற்றி விட்டார்கள். ஊழல்களால் உண்டான அவப்பெயரை மறைக்க தி மு க சப்பைக்கட்டு பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சரியாக அவர்களின் முகத்தில் அறைந்தார் போல சென்னையில் நேர்மையாகவும் மக்கள் வளர்ச்சிக்காகவும் ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்று பேட்டி அளித்திருக்கிறார் திரு நரேந்திர மோடி அவர்கள்! தமிழகம் மட்டுமல்ல பல கேடு கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் இவரைப் பார்த்தாவது பாடம் கற்க வேண்டும்! நரேந்திர மோடியை என்ன தான் மத வாதி என்று ஒட்டு மொத்த ஊடகங்களின் துணையைக் கொண்டு காங்கிரஸ் அரசு பிரசாரம் செய்யப்பார்த்தாலும் உண்மை என்னவோ வேறாகத் தான் இருக்கிறது என்பது மோடிக்கு ஓட்டு போடும் முஸ்லீம்களின் எண்ணிக்கையே காட்டிவிடுகிறது!

இவரை மரணத்தின் வியாபாரி என்று தூற்றிப்பார்த்தும் இத்தாலி சோனியாவால் குஜராத்தில் தனது இத்தாலி ராஜ்ஜியத்தை நிறுவ முடியவில்லை. தமிழகத்தைப் போலவே குஜராத் சட்டசபைத் தேர்தலின் போதும் பல இலவச திட்டங்களை அறிவித்துப் பார்த்தது இத்தாலி காங்கிரஸ். ஆனால் இலவசங்களைப் புறக்கனித்த குஜராத்தியர்கள் காங்கிரஸையும் புறக்கனித்தனர்.

நரேந்திர மோடியிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?" அதற்கு மோடியோ, "முழுமையான வளர்ச்சி, எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் நாட்டை முழுமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே உண்மையான செக்யூலரிசம்" என்றார்.

காந்தி உருவாக்கிய சுதேசி காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸாகத்தான் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சோனியாவின் தலையசைப்பை கண்டே பணி செய்கின்றனர். ஆக காங்கிரஸின் முழு நடவடிக்கைகளுக்கும் சோனியாவே மூலக்காரணி என்கிற முறையில் மத்திய அரசின் குறைகளை குறிப்பிட நேரடியாக சோனியாவைச் சுட்டியே கேள்வி எழுப்பும் ஒரே இந்திய அரசியல் தலைவர் திரு.நரேந்திர மோடி மட்டுமே! அதனால் தான் அவர் மீது தீராத வண்மத்துடன் சோனியா தொடர்ந்து தாக்குவதும், ஊடங்கள் இத்தாலி காங்கிரஸிற்கு ஆதரவாக நரேந்திர மோடியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலவீனப்படுத்த முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.


ஆனால் இன்று வரை இவர்களது பருப்பு வேகவில்லை என்பது அவரது நிர்வாக செயல்பாடும் அதன் மூலமாக அவருக்குக் கிடைக்கும் வெற்றிகளையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்!

இதோ மரணத்தின் வியாபாரி பற்றி திரு.சோ இவ்வாறு கூறி அழைக்கிறார்!





மோடியை ஆதரிக்கும் முஸ்லீம் வாக்காளரின் பேட்டி!


இந்த வக்காளர் கூறுவதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் "காங்கிரஸ் எங்களை ஓட்டு வங்கியாகவே உபயோகிக்கிறது. மோதி ஜி யின் வளர்ச்சிப்பணிகளைப் பார்த்தே நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்"




இதோ தினமலரில் இன்று வெளியான செய்தியைப்! பார்ப்போம்!

**** தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதில் இருந்து சில:இன்று, வர்த்தக முறை முற்றிலும் மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே உங்கள் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கு குஜராத், தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டுள்ளது.முதல் காரியமாக, அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்தோம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம்.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.


மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், "பிராட் பேண்ட்' இணைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதோடு ஓய்வதில்லை; இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் தீர்மானம்.முதலீடுகளை முன்னிறுத்தியே, "சிறப்பு முதலீட்டு மண்டலங்கள்' (எஸ்.ஐ.ஆர்.,) 30 அமைக்க உள்ளோம். சர்வதேச பொருளாதார நகரம் (கிப்ட்) அமைக்க உள்ளோம். மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள் என்பது தான் எங்கள் சமன்பாடு. அப்போது தான், வளர்ச்சிப் பாதையில் இருந்து எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்கும்.நான் முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.


இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம்.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. விருது பெறுவது என்பது, ஏதோ வாராந்திர நிகழ்ச்சி மாதிரி ஆகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருப்பதால், எது, எதற்கானது என்பது கூட நினைவில் இருப்பதில்லை.சமீபத்தில் வாங்கிய ஒரு விருதை மட்டும் சொல்கிறேன். குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.நா.,வின் சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது (கைதட்டல்). இதுவல்ல விஷயம். எதற்காக இருந்த விருது வழங்கப்பட்டது என்பது தான் விஷயம்.முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது (பலத்த கைதட்டல்).


முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் பெற்றிருக்கிறோம்.உங்கள் கனவுகளை நனவாக்க, உங்களோடு நான் இருக்கிறேன். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்லுவேன்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


தொடர்ந்து, தொழிலதிபர்களுடன் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது. 70க்கும் மேற்பட்ட கேள்விகள் குவிந்தன. 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தவர், மற்றவற்றுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்புவதாக உறுதியளித்தார்.


குறுந்தொழில்களில் கவனம் : வந்திருந்த தொழிலதிபர்களில் ஒருவர், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (எஸ்.எம்.இ.,) வழங்கப்படும் வசதி வாய்ப்புகள் பற்றி மோடியைக் கேட்டார். அவர் அளித்த பதில்:எப்போதுமே எங்கள் முதல் முன்னுரிமை, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்குத் தான். வங்கிக் கடனில் இருந்து, அனைத்து வகையான அனுமதிகள் வரை எதுவாக இருந்தாலும், எஸ்.எம்.இ.,க்கு தான் முன்னுரிமை. இவற்றின் மூலம் தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. குஜராத் மாநிலத்தின், 70 சதவீத தொழில் வெற்றி எஸ்.எம்.இ.,க்கள் மூலம் தான் கிடைத்துள்ளது.இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் நாங்கள் கவனம் செலுத்துவது தான்.


நெருக்கடியிலும் நெத்தியடி : குஜராத் மாநில தொழில்துறைச் செயலர் சாகு பேசியதாவது:கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில், "துடிப்பான குஜராத்' மாநாட்டை நடத்த வேண்டுமா என, அனைத்து தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. தொழிலதிபர்களும், அடுத்த ஆண்டு வைத்துக்கொள்ளலாமே என அறிவுரை வழங்கினர்.இது தொடர்பாக முதல்வரிடம் கருத்து கேட்டோம். அவர் சொன்னார்: நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள இது தான் சரியான நேரம். நிச்சயம், 2009ல், மாநாடு நடக்கும் என்றார். சொன்னபடியே நடந்தது. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.இவ்வாறு சாகு பேசினார்.


ஒபாமா மீது மறைமுக தாக்கு : "குஜராத்தில் தொழில் துவங்க விரும்புகிறேன். உங்களால் எந்த விதத்தில் உதவ முடியும்?' என, இன்னொருவர் கேட்டார். அதற்கு மோடி சொன்னது:தாராளமாய் வரவேற்கிறோம். நான் ஒன்றும், அமெரிக்க அதிபர் ஒபாமா மாதிரி இங்கு வரவில்லை. பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை எங்கள் அதிகாரிகள் அனைவரும் இங்கு தான் இருப்பர். அதற்குள், குஜராத்தில் என்னென்ன செய்யப்போகிறீர்கள்? என்னென்ன தேவை? என்பவை பற்றி முடிவெடுக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா? ஆமெனில், கையோடு அதற்கான உத்தரவைப் பெற்றுச் செல்லலாம்.மோடி இவ்வாறு பேசியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. "அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வந்தபோது வெறுங்கையோடு வந்தார். அமைச்சர்கள், அதிகாரிகளோடு வராமல், தொழிலதிபர்களோடு வந்து, இங்கு ஏராளமான ஆர்டர்களை வாங்கிச் சென்றுவிட்டார். அதனால் தான், இரு நாட்டு ஒப்பந்தம் போன்ற விஷயங்கள் கையெழுத்தாகவில்லை' என ஒரு பேச்சு உண்டு."அவ்வாறில்லாமல், "ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் குழுவோடு வந்திருக்கிறேன். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் இப்போதே போட்டுக்கொள்ளலாம்' என்பது தான் மோடியின் கருத்தாக இருந்தது ******

மோடியைப் போல ஒரு முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


ஆத்தீ...நினைச்சாலே தலை சுத்துதே!


.
ராசா, அடுத்து என்ன பண்ணலாம்னு 'உன்' ராணிக்கிட்ட கேட்டியா?


இந்த படத்தை சும்மா தான் போட்டேன்!



[DOT]