Showing posts with label swami vivekanandar. Show all posts
Showing posts with label swami vivekanandar. Show all posts

Sunday, March 24, 2013

அறிபவன், அறிவு, அறியும் கருவி!



இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள், விலங்குகள், உயிருள்ள மற்ற அனைத்தும் இறைவனின் வாழும் வெளிப்பாடுகளே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல் வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கேயோ ஒரு மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப் பார்ப்பீர்கள்? நீங்களே கொலைகாரர்களாக் இல்லாவிட்டால் வெளியில் எப்படி கொலைகாரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள்உங்களுக்குத் தீமை மறைந்துவிடும்.

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

சீடர்: 'சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?"

சுவாமி விவேகானந்தர் "உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் "சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா'- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது. என்று கூறுகிறார்.

அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.

மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகிவிடுகின்றன. அதனால் தான் வேதங்கள், 'அறிபவனை எதனால் அறிவது?' என்று கேட்கின்றன. 

உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. 'உணரப்படுகிறது' என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.

- சுவாமி விவேகானந்தர்


Saturday, September 15, 2012

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!



உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மீகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத் தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவின் பாரம்பரியமிக்க மகாத்மியத்தை அழிக்க நினைப்பவர்கள் தோல்வியையே தழுவுவார்கள்.

எனது அருமைச் சகோதரா! ஒரு பழைய விளக்கை எடுத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள், பட்டி தொட்டிகள், காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலை சிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு, பார்க்கலாம்.

நமது தாய்நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருகும் கடன் மகத்தானது. நாட்டுக்கு நாடு எடுத்துஒப்பிட்டுப் பார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருப்பதைப் போன்று, பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்.

கிரீஸ் நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரீகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக் கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரீகம் இருந்து வந்திருக்கிறது. ஏன், அதற்கும் முன்பேகூட வரலாற்றிலே குறிப்புகளே கண்டுபிடிக்க முடியாத, சரித்திரமே புக முடியாத, இருண்ட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் அன்புடனும் வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே இருந்துவந்திருக்கின்றன.

ஓர் முனிவர் தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையிலே வைத்திருந்தார். அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றித் தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி ஒரு கதையை நாம் குழந்தைகளாக இருந்த போது கேட்டிருக்கிறோம். அதே போன்றது தான் நம் நாட்டின் கதையும். நம் நாட்டின் உயிர் மதத்தில் தான் இருக்கிறது. இதை ஒருவராலும் அழித்துவிட முடியவில்லை. எனவே தான் பாரத நாடு எத்தனை எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

-- ஸ்வாமி விவேகானந்தர்

Sunday, August 5, 2012

விவேகானந்தரின் பொன் மொழிகள்!




சமயசாதனையின் நுட்ப ரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமயசாதனையின் முழு உண்மையாகும். 'கடவுளே! கடவுளே!' என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆகிறான்.

ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் உன் கைவிரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்.

லௌகீக உலகம் பற்றிய சக்தியின் மையமாக ஐரோப்பா இருக்கிறது. அது தன்னுடைய இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையாக அது தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால், இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் நொறுங்கி அழிந்துவிடும். ஐரோப்பாவை இத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றக் கூடியவை உபநிஷத உண்மைகளே ஆகும்.

ஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலை பெற்றிரு. 

கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் பாவம் செய்வதில்லை. மனதால் கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை. 

சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.

- ஸ்வாமி விவேகானந்தர்

Friday, June 22, 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள்!



பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து நீ தப்பி ஓட முயற்சி செய்யாதே. வெற்றியா தோல்வியா என்று நீ கவனித்துக் கொண்டிருக்காதே. பரிபூரனமான தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு. வெற்றி பெறுவதர்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து, விடா முயற்சி செய்கிறது என்பதி உணர்ந்து கொள்.

கடவுளிடம் நம்பிக்கையில்லாதவன், தத்துவ தர்சனங்கள் இல்லாதவன், மதப்பிரிவு எதிலும் சேராதவன், எந்த ஒரு கிறிஸ்தவக் கோயிலுக்கும் ஹிந்து கோவிலுக்கும் செல்லாதவன், லௌகிகப் பற்றிலேயே தோய்ந்து போனவன் என்று இப்படியெல்லாம் ஒருவன் இருந்தாலும் கூட அவனும் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதைப் புத்தர் பெருமானுடைய வரலாறு காட்டுகிறது.

ஒரு யாகத்தில் விலங்குகளைப் பலியிடுவதைத் தடுத்து நிறுத்த தம் உயிரை வழங்க முன்வந்தவர் அவர் ஒருவரே! " நீ சொர்கம் போவதர்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது உதவி செய்யுமென்றால், ஒரு மனிதனைப் பலியிடுவது அதைவிடவும் அதிகமாக உனக்கு உதவி செய்யும். எனவே என்னை நீ பலியிடு" என்றார். அதைக் கேட்ட அந்த அரசன் வியப்படைந்து போனான்.

நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள். மற்றவர்களுடைய நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான்பெற முடியும். இதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை.

கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும் போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.

Saturday, September 10, 2011

நாம் தெய்வீகமானவர்கள்!




விதி என்று எதுவும் கிடையது. நமது வாழ்க்கை நமது முன்வினைப் பயனின், நமது கர்மத்தின் விளைவு இவற்றால் உண்டான பலனே விதி எனப்படுகிறது. இவ்வாறு நாமே நமது கர்மத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றால், அதை அழிக்கவும் நம்மால் முடியும் என்பதே உண்மை.

'வண்ணத்துப் புழு தன் உடலிலிருந்து சுரக்கின்ற பொருளால் தன்னைச் சுற்றித் தானே கூடமைத்துக் கொண்டு அதில் தானே நிறைப்படுகிறது. அங்கே கிடந்தவாறு அது அழலாம், கதறலாம், ஓலமிடலாம். ஆனால் அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். இறுதியில் அதுவே ஞானம் பெறுகிறது, அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது.

அதுபோலத்தான் நமது தளைகளைப் பொறுத்தவரையிலும் யுக யுகங்களாக நாமும் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருகிறோம். இப்போது துன்பத்தை உணர்கிறோம். நாம் கட்டுண்டிருப்பதை எண்ணி அழுது புரள்கிறோம். ஆனால் அழுவதாலும் புரள்வதாலும் எந்தப் பயனும் இல்லை. இந்தத் தளைகளை உடைப்பதில் நாம் முனைந்து செயல்பட வேண்டும்.

'எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை, மனிதன் இயல்பிலேயே தூயவன், முற்றிலும் புனிதமானவன். ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள் தான்.

இந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறியாமையே நம்மைக் கட்டுண்டவர்களாக ஆக்கியிருக்கிறது. எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம். அறிவு உலகை நல்லதாக்குகிறது. அறிவு எல்லா துன்பங்களையும் ஒழிக்கிறது, அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது. எந்த அறிவு? வேதியலா? இயற்பியலா? வான இயலா? பூமியியலா?

அவை எல்லாம் நமக்குச் சிறிது உதவுகின்றன, மிகச்சிறுது உதவுகின்றன. ஆனால் முக்கியமான அறிவு என்பது உங்கள் இயல்பே, "உன்னை அறிந்துகொள்," நீங்கள் உண்மையில் யார், உங்கள் உண்மையான இயல்பு எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த எல்லையற்ற இயல்பை உங்களுக்குள் உணர வேண்டும். அப்போது தளைகள் எல்லாம் தானே நொறுங்கிப்போகும்!

நாம் தெய்வீகமானவர்கள், எப்படி? ஏன் தெய்வீகமானவர்கள்?

நாம் மூலசக்தியும் மகா சக்தியுமான தெய்வத்திடமிருந்து தோன்றியவர்கள். தெய்வம் என்னும் மாபெரும் ஜோதியிலிர்ந்து தோன்றிய சுடர்கள் நாம். பாலில் செய்த பண்டங்கள் அனைத்திலும் பாலின் தன்மை இருப்பது போல தெய்வத்திலிருந்து தோன்றிய நம்மிடமும் தெய்வீகம் உள்ளது. நாம் தெய்வீகமானவர்கள்.

நாம் மட்டுமல்ல, உயிரினங்கள் மட்டுமல்ல; மகாசக்தியிடமிருந்து தோன்றியதான இந்தப் படைப்பிலுள்ள ஒவ்வொன்றும், மரமும், செடியும், மண்ணும் விண்ணும், கடலும் மலையும் எல்லாம் தெய்வீகமே!

- ஸ்வாமி விவேகானந்தர்


.

Sunday, February 27, 2011

சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!




நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல்
வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கேயோ
ஒரு மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப்
பார்ப்பீர்கள்? நீங்களே கொலைகாரர்களாக் இல்லாவிட்டால் வெளியில்
எப்படி கொலைகாரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள், 
உங்களுக்குத் தீமை மறைந்துவிடும்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள்.
ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். 

துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.
எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது. 

மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மீக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.

எங்கும் எதிலும் இறைவனையே பார்க்க வேண்டும். அப்போது தான்
உலகை உண்மையாக அனுபவிக்க முடியும்.

புத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.

புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். உத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் த்கழ்கிறாள். 

இந்தக்காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளீவாக நான்
பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.


- சுவாமி விவேகானந்தர்



.

Wednesday, January 12, 2011

சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!


இறைவன் உள்ளத்தால் தான் காணப்படுகிறார். அறிவால் அல்ல.

இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற

நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்)
உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப்
போகின்றான்.

யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப்
பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.



இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை, பிரிட்டனின்
அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார். “கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக முழங்கினாராம்.

மகானுக்கு இன்று பிறந்தநாள்!

.

Monday, October 25, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள். ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.

எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது.

இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல். உனக்கும் சொல்லிக்கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாமும் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல். அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.

உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் சொற்களின்
உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள். உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அரிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

- சுவாமி விவேகானந்தர்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் "வேதங்களின் சிறப்பு என்ன?" என்று கேட்கப்பட்டது.

"'தங்கள் போதனையையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்பத் திரும்ப வற்புறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெரும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்" என்று பதிலளித்தார். வேதங்கள் இறைவாக்காகவே கருதப்பட்டாலும் இறைநிலையை அடைவதே அதனினும் சிறந்தது என்பதை மிக எளிமையாக விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.

மனதில் நிறுத்த சில பெரியோர் வாக்கு:-

அகந்தை கொள்ளாதீர்கள் அது தீமையில் முடியும்.

நல்லோர்களின் நட்பைப் பெறுங்கள். அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதில் வஞ்சம் வைக்காதீர்கள். அது மரணத்தைக் காட்டிலும் கொடிய துன்பம் தரும்.

தகுந்த நேரத்தில் உதவுங்கள். அத்தகைய உதவி விலைமதிப்பிட முடியாததாகிறது.

தீயோர் நட்பு, பிறர் உடைமை, மாற்றான் மனைவி இவற்றில் ஆசை வந்தால் அதை அலட்சியம் செய்யுங்கள். அது அழிவைக் கொடுக்கும்.

தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவனே உண்மையான நண்பனாவான்.

நற்சிந்தனையும் நல்லொழுக்கமுமே வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குணங்களாகும்.

ஆசைகளைத் துறக்கத் தெரிந்தவனே துயரங்களை வெல்ல முடிந்தவன்.

சத்தியமும் பொறுமையும் கொண்டவனே உலகை வெல்லக்கூடியவன்.

பிற ஜீவன்களின் மீது கருணையோடு நடந்து கொள்பவன் முன்னால் இறைவனே பணிந்து நிற்பான்.

.

Thursday, September 16, 2010

சீர்திருத்த வாதிகள் பற்றி சுவாமி விவேகான‌ந்த‌ர்!


சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு வியாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதிப்பதில் அளவில்லாத பிரியம் கொண்டவர்களை சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவின் மூலம் சாடியதன் சாரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நடந்த ஒரு சொற்ப்பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரையாற்றுகிறார் "சிறுவர்களே, மீசைமுளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச்
செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்து நின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் (அந்தக்காலத்தில்) முதுகில் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைக் கட்டளையிடுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அத்தகையத் தெய்வ நிந்தனையிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியப் பாடத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சில வரிகளை எழுதி அதை வெளியிட சில முட்டள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்த உலகத்தின் கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என்று நினைக்கின்றீர்களா?

நீங்க‌ள் தான் இந்தியாவின் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் என்று நினைத்துக் கொண்டீர்க‌ளா? இந்தியாவில் எந்த‌க் கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா? இந்தியாவின் வ‌ர‌லாற்றை நீங்கள் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? ச‌ங்க‌ர‌ர் யார்? ராமானுஜ‌ர் யார்? நான‌க் யார்? சைத‌ன்ய‌ர் யார்? க‌பீர் யார்? தாது யார்? ஒளிமிகுந்த‌ ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளின் வ‌ரிசைக‌ள் போல் ஒருவ‌ர் பின்னால் ஒருவ‌ராக‌ வ‌ந்த‌ இந்த‌ ம‌க‌த்தான ஆச்சாரிய‌ர்க‌ள் எல்லாம் யார்?

ராமானுஜ‌ர் தாழ்ந்த‌ குல‌த்த‌வ‌ர்க‌ளுக்காக‌ வேத‌னைப் ப‌ட‌வில்லையா? த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் ப‌றைய‌னைக் கூட‌ வைண‌வ‌ ச‌ம‌ய‌த்தில் அனும‌திக்க‌ப் பாடுப‌ட‌வில்லையா? த‌ன்னுடைய‌ ச‌ம‌ய‌த்தில் முக‌ம‌திய‌ர்க‌ளைச் சேர்த்துக்கொள்ள‌ அவ‌ர் முய‌ல‌வில்லையா? இந்துக்க‌ளோடும் முக‌ம‌திய‌ர்க‌ளோடும் உற‌வாடி ஒரு புதிய‌ நிலையைக் கொண்டுவ‌ர‌ நான‌க் முய‌ல‌வில்லையா? அவ‌ர்க‌ள் எல்லாம் முய‌ன்றார்க‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி இன்னும் ந‌ட‌ந்து கொண்டே தானிருக்கிற‌து. வித்தியாச‌ம் இது தான். அவ‌ர்க‌ள் இன்றைய‌ச் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல‌ எக்காளமிட‌வில்லை. இன்றைய‌ச் சீர்திருத்த‌க் கார‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளின் வாய்க‌ளில் சாப‌மே இல்லை. அவர்கள் யாரையும் இழிவு படுத்திப் பேசியதில்லை.

அவ‌ர்க‌ளுடைய‌ உத‌டுக‌ள் வாழ்த்துக்க‌ளை ம‌ட்டுமே கூறின‌. அவ‌ர்க‌ள் எந்த‌க் கால‌த்திலும் நிந்திக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் "இந்துக்க‌ளே, நீங்க‌ள் இதுவ‌ரை செய்த‌வை எல்லாம் ந‌ல்ல‌தே. ஆனால் என் ச‌கோத‌ர‌ர்க‌ளே, அதை விட‌ ந‌ல்ல‌தை நாம் செய்வோம்" என்றே கூறின‌ர். இன்றைய‌ சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல் "நீங்க‌ள் எல்லாம் கெட்டுப் போன‌வ‌ர்க‌ள். இப்போது நாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ முய‌ற்சிப்போம்" என்று சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருந்தீர்க‌ள். இப்போது மேலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாவோம்" என்றே கூறினார்க‌ள். இதுதான் இர‌ண்டு பேரிடையே அமைந்துள்ள‌ மிக‌ப் பெரிய‌ வித்தியாச‌ம்." என்றார் சுவாமி விவேகான‌ந்த‌ர்.

ராம‌சாமி நாய‌க்க‌ர் தோற்றுவித்த‌ இந்து ம‌த‌ ஒவ்வாமையை அது என்ன‌வென்றே ஆராயாம‌ல் அது தான் ப‌குத்தறிவு என்று மூட‌ந‌ம்பிக்கை கொண்டிருக்கும் த‌ற்க்கால‌ போலி சீர்திருத்த‌வியாதிக‌ள் இந்த‌ ப‌குதிய‌ப் ப‌டித்தால் அல்ல‌து சுவாமி விவேகான‌ந்த‌ர‌து புத்த‌க‌த்தை யாரிட‌மாவ‌து ஓசிக்கு வாங்கி ப‌டித்தாவ‌து கொஞ்ச‌ம் உண்மையான ப‌குத்த‌றிவு‌ பெறுவ‌ர்க‌ளா என்று பார்ப்போம்.


Friday, August 13, 2010

உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது!




"எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப்பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைபைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்."

"மிருகபலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்."

"புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும் பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியை பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் ப்ரகடனப்படுத்துங்கள்."

"சமய சாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமய சாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்."

"ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ மனதிற்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன் கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்."

"நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்."




சில சுவாரஸ்யங்கள்.:

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மைசூர் மகாராஜா, “நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை
விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தாராம். அதற்கு சுவாமி விவேகானந்தர், “நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார். சத்தியத்தின் வீரியம் இது தான் போலும்.


இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை, பிரிட்டனின் அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார். “கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக முழங்கினாராம். இன்றைக்கும் கிறிஸ்தவ அரசாங்கத்தின் பிடியில் தான் இந்தியா இருக்கிறது என்று
தெரிந்தால் மேலுலகத்திலும் அவர் நிம்மதி இழக்கலாம்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார். அதை வெளிப்படையாக விவாதித்தும் இருக்கிறார்.

அன்றைக்கே கூட கிறிஸ்தவ மத வெறியர்கள் இந்து சாமியார்களை அவமதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்பதற்கு சுவாமி விவேகானந்தரின் வரலாறே சாட்சி எனலாம். சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை. மும்பையில் பிறந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப் பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப் பற்றி அமெரிக்காவிலேயே அவதூறாகப் பேசவைத்தனர். அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லையாம். இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப் பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர். இந்த கொள்ளைக்கூட்டத்தை நம்பி இன்றைய இந்தியாவில் மந்தை மந்தையாக மதம் மாறும் கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?

சுவாமி விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எடுத்தால் அதைப் பத்தி பத்தியாகப் படிப்பாராம். நம்மைப் போல் வார்த்தை வார்த்தையாக இல்லை.

சிறப்பு தானே!




"அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுந்காலமாகத் தனது நாகரீகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளோ அல்லது வேறு காரனங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இப்போது சிந்திக்கவேண்டியது ஒன்று தான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து அந்தக் கப்பலைப் பழுது பார்க்கப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து இந்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் பணிக்கு தருவோம். அல்லது அந்தப் பணியிலே தோல்வி கண்டால் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி மடிவோம். புறப்படுங்கள். நடைபோடுங்கள், தேசம் காக்க உங்களை அர்ப்பணியுங்கள்"

- சுவாமி விவேகானந்தர்


Saturday, April 10, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள் நசுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்றுபோகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வந்து சேரும்; உதவி வந்து சேரும்; அசைக்கவே முடியாத உறுதியான வலிமை வந்து சேரும்.


உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவு, முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு. உன் விதியில் நீ நம்பிக்கை கொண்டிரு. அது, கையில் காசில்லாத உன்னை நம்பித்தான் இருக்கிறது. 


கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரப்புங்கள். செயலாற்றுங்கள்! செயலாற்றுங்கள்! வேலை செய்யும்போது ஒரு வேலைக்காரனைப் போல இருங்கள். சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். எல்லையற்ற பொருமையைக் கடைபிடியுங்கள். வெற்றி உங்களுடையதே!


கவனமாக இருங்கள். உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருங்கள். மெதுவாகவே என்றாலும் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி.


இன்றைய இளைய தலைமுறைகள் நவீன தலைமுறைகளான உங்கள் மீது தான் எனது நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக்கருத்துக்கள் பரவும் வரையிலும் , என் மீது பேரண்புகொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே செல்வார்கள்.


மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மை குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.


எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது நல்லதை விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.


- சுவாமி விவேகானந்தர்.