Thursday, August 12, 2010

பதின் வயது திருமணம் குற்றமில்லை!



இயற்கையின் நியதிப்படி இணைசேரும் பருவம் வந்தால் பாலுறவு கொள்வது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அதை திருமணம் என்ற சடங்கின் மூலம் முறைப்படுத்துவது மட்டும் எவ்வாறு சட்டப்படி குற்றமாகும் என்ற கருத்தை எனது பதின்வயது திருமணம் குற்றமா? என்ற பதிவில் எழுதியிருந்தேன். இப்போது நீதிமன்றம் குற்றமில்லை என்றொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் வழக்கம் போல சட்டக்குழப்பங்களும் வாதங்களும் இது குறித்து தொடர்கின்றன என்பது வேறு விஷயம்.

செய்தி
இங்கே !

டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.


அதாவது இணைசேரும் பருவத்தில் திருமணம் புரிந்து கொள்வது தவறில்லை என்கிறது தீர்ப்பு. இயற்கையாக இணை சேரும் பருவத்தில் உறவாட உந்தப்படும் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சடங்கின் மூலம் அதை முறைப்படுத்திக் கொள்வது மட்டும் சட்டப்படி தவறா என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

உணர்ச்சிகள் உண்டாகும் பருவத்தில் திருமணம் செய்துகொள்வதை சட்டத்தால் தடுப்பது இயற்கைக்கு மாறானது என்ற கருத்தை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது என்றே கூறலாம். பதின்வயதில் பாதுகாப்புடன் உடலுறவு கொள்ளலாம் ஆனால் திருமணம் செய்து கொள்வது மட்டும் சட்டப்படி குற்றம் என்கிற முட்டாள் தனத்தை இந்த தீர்ப்பு தகர்த்திருப்பதாகவே தெரிகிறது.

பொதுவாக பதின் வயதை எட்டும் ஒவ்வொரு இளம் தலைமுறையினரின் உணர்ச்சிகள் சமூகத்திற்குள் நுழையும் புதிய வெள்ளம் போன்றதாகும். அவர்களது உணர்ச்சிகள் பாய்ந்து வரும் வெள்ளமென சமூகம் என்ற நிலத்தில் பாய்கிறது. அவ்வாறு வேகமாக பாயும் வெள்ளம் வயற்பரப்பிலும், கொஞ்சம் கட்டாந்தரையிலும், கொஞ்சம் சாக்கடையிலும் என்று கண்ட இடங்களில் பாய்ந்து ஓடக்கூடும்.



ஆனால் அவ்வாறு எல்லா இடங்களிலும் பாய்ந்து அத்தகைய நீர் வீனாவதைத் தடுக்க பொங்கி வரும் வெள்ளம் அனைத்தையும் லாவகமாக வரப்புகளுக்குள் திருப்பி வயற்பரப்பிற்குள் முறையான வழிகளில் பாயச்செய்து வளமான நிலத்தை உண்டாக்குவது போல பதின் வயதினருக்கு பருவத்தின் உணர்ச்சி பொங்கி வரும்போதே அதனை திருமணம் என்ற வரப்பிற்குள் லாவகமாகத் திருப்பி குடும்பம் என்ற நிலத்திற்குள் பாயச் செய்து வளமான ஒரு சமூகத்தை உருவாக்கி வந்தனர் நம் முன்னோர்கள்.

அதனை எல்லாம் குழந்தைத் திருமணம் என்று கூறி உணர்ச்சிகளை முறைப்படுத்தும் கலாச்சாரத்தை ஒழித்து முறை கெட்ட 'காண்டோம்' கலாச்சாரத்தை வளர்க்கவே விரும்பினர் நாகரீகக் கோமாளிகள். நேற்று வெளியான பதின் வயது திருமணம் செல்லும் என்ற தீர்ப்பு இந்த நாகரீகக் கிறுக்குத்தனத்தை கொஞ்சம் உதைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

ஆனால் இந்த தீர்ப்பை ஒட்டி சில சந்தேகங்கள் எழுகிறது.

காதலித்தேன் என்று கூறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் பதின்வயதினருக்குத்தான் இத்தீர்ப்பு பொருந்துமா? அல்லது இதே போன்ற பதின் வயதினருக்கு அவர்கள் சம்மதத்துடன் பெற்றோர்களே ஒரு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அதற்கும் பொருந்துமா?

அவ்வாறு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பலரை காவல் துறை கைது செய்திருக்கிறது. பல திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது சட்டம்?

குழந்தைத் திருமணம் என்றால் என்ன? இளவர் திருமணம் என்றால் என்ன? என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க நீதிமன்றம் முன்வருமா அல்லது சரியான முறையில் மக்களுக்கு விளக்கும் கடமையை அரசுக்கு உணர்த்துமா? உத்தரவிடுமா?

அனுமதிக்கப்படாத குழந்தை திருமணம் மற்றும் அனுமதிக்கப்படக்கூடிய இளவர் திருமணம் ஆகியவற்றின் வயது வரம்பு என்ன என்பதை எப்போது சரியாக குழப்பம் இல்லாமல் அறிவிக்கப்போகிறது அரசாங்கம்?

இவற்றில் எதையும் முறையாகச் செய்யாமல் ஏற்கனவே இருந்த முன்னோர்களின் முறையான வாழ்க்கையையும் சீர்குலைத்து சமூக ஓட்டத்தை இத்தனை வருடங்களாக பாழ்செய்ததற்கு சட்டமோ இத்தாலி அரசாங்கமோ என்ன பதில் கூறப் போகிறது?

ஆக எங்கே சுற்றினாலும் இந்தியர்களின் (பண்டைய) கலாச்சாரமே சிறந்தது என்ற முடிவிற்கு நாகரீக பித்தர்கள் வந்து தான் ஆகவேண்டும் என்பதற்கு இதுவே சான்று!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்


சும்மா! எந்திரன் ஸ்பெஷல்!



2 comments:

Madhavan Srinivasagopalan said...

Your Sudden appearance gives me a Jolt like that felt in an earthquake situation.

Good to see you back.

So many posts.. i need time to read & comment..

thanks for coming back my friend 'hayram'.

hayyram said...

thanks and welcome madhavan.