Friday, September 24, 2010

காங்கிரஸின் பலவீனங்களும் போலி செக்யூலரிஸமும் - பேசும் படங்கள்!






ஆந்திராவில் தெலுங்கானாவை தனியாக பிரித்துத் தருவோம் என்று உறுதி கூறியது காங்கிரஸ்! அதனை எதிர்த்து 120 எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்ததை காரணம் காட்டி பல்டி அடித்த காங்கிரஸ்!


ரயில்களைக் கவிழ்க்கும் நக்ஸலைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இழுபறி செய்யும் காங்கிரஸ்!


காஷ்மீர் பிரச்சனையில் கலவரக்காரர்கள் மீது பாவப்பட்டு ராணுவத்தின் அதிகாரத்தை குறைக்கும் காமெடி பீஸ் காங்கிரஸ்!


காமன்வெல்த் ஊழல்களில் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் மௌனம் சாதிக்கும் காங்கிரஸ்!


தீவிரவாதிகளை தூக்கிலிடாமல் மத விளையாட்டு விளையாடும் காங்கிரஸ்!


மேலும் ஒரு மத விளையாட்டை பாபர் மசூதி தீர்ப்பை தள்ளிப்போட வைத்து நடத்துகிறதோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் பிரச்சனை தான். இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து விட்டு தீர்ப்பு கூற காத்திருக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளாராம். எனவே செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்தத் தீர்ப்பை அளித்தாக வேண்டியுள்ளது.


அப்படி சொல்ல முடியாமல் போனால், இந்த தீர்ப்பை வெளியிட முடியாது என்கிறது செய்திகள். மாறாக புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதை விட முக்கியமாக, இந்த வழக்கையே மொத்தமாக முதலிலிருந்து விசாரிக்க வேண்டி வரும் என்றும் கூறுகிறார்கள். எனவே இச்சூழ்நிலையை பயன்படுத்தி இன்னும் பல வருடங்கள் வழக்கை இழுத்தால் நமக்கு பிரச்சனை இல்லை என்று காங்கிரஸ் நினைக்கிறதோ என்னமோ! 28ம் தேதி தெரியும் சேதி!


மொத்தத்தில் யாரும் எப்படி வேண்டுமானாலும் நாட்டைக் கெடுக்கட்டும். நமக்கு ஆட்சியும் அதிகாரமும் முக்கியம். அது தான் இத்தாலி காங்கிரஸ்!










No comments: