Thursday, July 14, 2011

க்ரீமீ லேயரும் சில செய்திகளும்!


க்ரீமி லேயர் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 69% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுமாம்! முதல்வர் கூறிவிட்டார். அதாவது ஒருவர் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர் என்று தம்மைத் தாமே கூறிக்கொண்டு அவர் கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அவருக்கு படிக்க ஸ்காலர்ஷிப் என்கிற பெயரில் தண்ணியடிக்கப் பணமும், முட்டாளாக இருந்தாலும் கல்லூரியில் படிக்க உடனடி இடமும் எந்த வேலைக்கும் லாயக்கில்லாமல் இருந்தாலும் அரசாங்க வேலை கிடைக்கும்!

இத்தனைச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு நான் கஷ்டப்படுவதற்கு பார்ப்பனன் தான் காரணம் என்று ஜல்லியடிப்பவர்கள் சேலையைக் கட்டிக் கொண்டு தான் பொது ரோட்டில் நடக்க வேண்டும்!

மும்பையில் மீண்டும் குண்டு வெடிப்பு! 



எத்தனை முறைதான் மும்பையில் குண்டு வெடிக்கும். மும்பை மக்கள் உண்மையில் பாவம் தான். எப்போது எங்கே குண்டு வெடுக்கும் எப்போது சாவோம் என்பது தெரியாமலே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடமாடுகிறார்கள். நித்திய கண்டம் பூர்ண ஆயிசு.  மும்பையில் வாழும் யாராவது ஒரு பகுதியனருக்காவது தொடர்பில்லாமல் இவை நிகழ வாய்ப்பே இல்லை. தீவிரவாதிகளுக்கு திட்டமிட்டு செயலாற்ற உள்ளூர்கார சக இனத்தவர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும். அந்த வகையில் இவர்களுக்கு உதவும் உள்ளூர்வாசிகளை அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலே ஒழிய இந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் ஓயப்போவதில்லை.

இவர்கள் திவிரவாதிகள் என்றே தெரியாமல் யாராவது ஆதரவு கொடுத்திருந்தாலும் அது எப்படி நடந்திருக்கும் என்று கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசாங்கத்தை நடத்துவதென்னவோ இத்தாலியன் கம்பெனி. இத்தாலிக்காரியைப் பொறுத்தவரை செத்து மடிவது இந்தியர்கள் தான்.  அதனால் சகவாசமாக ஒரு கண்டனம் தெரிவித்து விட்டு அடுத்த வேலைக்குச் செல்லலாம். அவருக்கு பினாமியாகச் செயல்பட்டு வரும் பிரதமரோ எந்த மரண ஓலமும் காதில் விழக்கூடாது என்பதற்காகவே காதை மூடி முண்டாசு கட்டிக்கொண்டிருக்கிறார்.

அப்பாசாமியான சிதம்பரத்திற்கு உளவுத்துறையிடமிருந்து எச்சரிக்கை எதுவும் வரவில்லையாம்! வந்தால் மட்டும் ஏதாவது கிழித்திருப்பாரோ என்னமோ? எந்திரன் ரஜினி மாதிரி வேகமாகப் பாய்ந்து குண்டுகளை எல்லாம் கடலில் தூக்கிப் போட்டு மக்களைக் காப்பாற்றி இருப்பார் போலிருக்கிறது. உளவுத்துறையின் தோல்வியாகவும் இதைக் கருதக் கூடாதாம். என்ன ஒரு வெட்கம் கெட்ட பேச்சு.. தூ....!

அப்சல் குரு, அஜ்மல் கசாப் ஆகியோருக்கு மட்டுமே கறிசோறும் பிரியாணியும் கொடுத்துக் கொடுத்து அலுத்து விட்டதாம் இத்தாலி சோனியாவிற்கும், மண்ணாய்ப்போன மோகன அசிங்கத்திற்கும், அதனால் அடுத்து கைதாகப்போகிறவர் யாரோ அவரது விருந்தோம்பல் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்களாம்!

யார் சிக்குகிறார்கள் என பார்ப்போம்..!

கொசுறு: ரம்ஜான் நோன்பிற்கு கஞ்சி காய்ச்ச அரசாங்கச் செலவில் மசூதிகளுக்கு அரிசி அளிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!


பொது ஜனத்தின் குமுறல் பற்றிய அழகான படம்!


இதே படத்தைத் தான் கமலஹாசன் தமிழ் படுத்தி இருப்பாரே! அதைப் போடலாமே என்பீர்கள்! ஆனால் கமல் தன்னுடைய வழக்கமான இண்டெலிக்ஷுவல் அதிகப்பிரசங்கித் தனத்தால் படத்துக்குள் இந்துத்துவம் பற்றிச் சொல்கிறேன் என்று கூறி குஜராத் கலவரத்திற்குப் போய், பெண்ணின் கருவுக்குள் குழந்தையை எடுத்துக் கொண்றார்கள் என்று கண்ணீர் வராமல் அழுது ஆர்பாட்டம் செய்து கதையின் முக்கியச் சாரத்தை மதவாதமாக்கிக் கொச்சைப் படுத்தி இருப்பார். அப்பாவி மக்களின் குமுறலாக அது இல்லாமல் குழுத்தலைவன் பேசும் பாங்காக ஆகி அந்த கதாபாத்திரத்தின் எளிமைத் தன்மையையே கெட்டிருக்கும். அதனால் தான் இந்த படத்தின் காட்சியை இடுகிறேன்.

ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பெண்ணின் கருவறுத்த சம்பவம் என்று ஒரு சம்பவத்தைக் கூறி கமலஹாசன் நீலிக்கண்ணீர் வடித்திருப்பாரே அது பற்றி ஒரு அரிய தகவலை நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாரத்தை கொஞ்சம் இங்கேயும் பகிர்கிறேன்.

"முதன் முதலில் 1921 ம் ஆண்டு, கேரளாவில் உள்ள மோப்ளாவில் பல தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களை இஸ்லாமியர் மதம் மாறச்சொல்லி படுகொலை செய்தனர். ஒரு தலித் கர்ப்பிணியின் கர்ப்பப் பைக்குள்ளிருந்த சிசுவை வெளியில் இழுத்துக் கொன்றதாகவும்*, ஆயிரம் பேருக்கு மேலான ஹிந்துக்களைக் கொன்றதாகவும் அண்ணல் அம்பேத்கரே நேரடியாகப் பதிவுசெய்துள்ளார்."
 "A few Europeans and many Hindus have been murdered, communications have been obstructed. Government offices burnt and looted and records have been destroyed . Hindu temples sacked, houses of Europeans and Hindus burnt,according to reports Hindus were forcibly converted to Islam and one of the most fertile tracts of South India is faced with serious famine. The result has been the temporary collapse of the civil government and offices and courts to standstill."

சுட்டி-1 , சுட்டி-2

"இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுக்கு போட்டியாக தொழில் செய்யும் தமிழர்களை விடுதலைப் புலிகள் என்று சொல்லி பௌத்த சிங்கள அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்தனர். 1981 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாயிற்று. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமிழ் பேசும் முஸ்லிம்களே தலைமை வகித்தனர். அப்படி இருந்தும் அதன் அடிப்படை முழக்கம் இதுவாக இருந்தது..
"நாங்கள் இஸ்லாமியர் ஆவோம். நாம் மூர்க்கர்களாகிய **தமிழர்கள் அல்லர்**. எங்களுக்கு சிங்கள அரசாங்கம் பாதுகாப்பும்,  சிறுபான்மையாகியதால் வாய்ப்பும் அளிக்க வேண்டும்".

"சிறிலங்கா முஸ்லீம்கள் பலமுறை விடுதலைப் புலியினரைக் காட்டிக்குடுத்தனர். இது பின்னடைவுக்கும் , பல புலிகள் மரணத்துக்கும் காரணமாக அமையவே, எம் தலைவர் பிரபாகரன் 1991ல் காட்டன்குடி மசூதியை தாக்கி அழிக்க ஆணையிடுகிறார். ஆனால் அதில் கொல்லப்பட்டவர்க ளின் புகைப்படங்களை வைத்து கட்டுக்கதைகள் முஸ்லீம்களால் இட்டுக்கட்டப் படுகின்றன. மோப்லா கலவரத்தில் முஸ்லீம்கள் செய்ததுபோல், விடுதலைப் புலிகள் இஸ்லாமிய கர்ப்பிணிகளின் சிசுக்களை கொன்றதாக வங்காளதேசம், பாகிஸ்தான், அரேபியா எங்கும் இஸ்லாமியர் பரப்புகின்றனர். தமிழர்களுக்கெதிராக ஜிகாதி கோரப்படுகிறது"

இந்தச் சுட்டியில் மேலும் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது.

"சரியாக ஒருகிழமைக்கு பின்னர் அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர் மட்டக்கிழப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகிழப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள்  சகிதம் சென்ற புலிபயங்கரவாதிகள்   நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள்  28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி  கொன்றுவிட்டு  அவளின் வயிற்றை   கோடரியால் கொத்தி  கிழித்து சிசுவை  வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை  சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த   நகைகள் கொள்ளையிடப்பட்டன."

இனி நான்:- எனக்குச் சந்தேகம்.. புலிகள் இப்படிச் செய்திருப்பார்களா? விடுதலைப் புலிகள் கண்ணியமான போராளிகள் என்பது உண்மையென்றால் முஸ்லீம்கள் கூறியது இட்டுக்கட்டிய கதையாக இருக்கும். முஸ்லீம்கள் கூறுவது உண்மை என்றால் புலிகள் கொடூரமானவர்கள் தான் என்பது உண்மையாகும். இதில் ஏதாவது ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.

ஆனால் நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருக்கும் வாதத்தின் படி பார்த்தால் குஜாராத்திலும் இதே போன்ற டெம்ப்ளேட் சம்பவம் முஸ்லீம்களுக்கு எதிராகச் செய்யப்பட்டதாக கூறப்படும் போது, இந்துக்கள் முகவும் கொடூரமானவர்கள் என்று பரப்புவதற்கு புலிகள் பற்றி கூறப்பட்ட அதே போன்ற செய்தியை இங்கேயும் பரப்புகிறார்கள் என்று நம்பத் தோன்றுகிறது.

"2002 ம் ஆண்டு முஸ்லீம்கள் கோத்ராவில் ரயிலைக் கொளுத்துகின்றனர். பலமுறை நடந்தது போல் இல்லாமல் இந்தமுறை ஹிந்துக்கள் பொங்கி எழுகின்றனர். கலவரம் முஸ்லீம்களுக்கு அதிக சேதம் ஏற்படுத்துகிறது . அதிலிருந்து கலவரம் குஜராத்தில் நிகழாமலேயே போகிறது. காட்டன்குடி சம்பவத்தில் புலிகளின் மேல் பழி போட்டது போல், ஹிந்துக்களும் முஸ்லிம் கர்ப்பிணியை சிசுவை வெளியே இழுத்து கொலை செய்ததாக ஜோடித்துப் பதிவு செய்யபடுகிறது. பல வருடங்கள் கழித்து பெஸ்ட் பேக்கரி உரிமையாளரான முஸ்லிம் தாய் தான் பொய் சாட்சி சொல்லி எந்தத் தவறும் செய்யாத ஹிந்துக்களை சிறையில் போட்டதாகப் புலம்புகிறார்"

"Yasmeen said she and her mother were forced and threatened, even assured by Rais Khan that he and Teesta Setalvad will fulfill all her needs throughout her life.

“Teesta Setalvad used to explain to me about the case there. From there she used to take me to the office of Public Prosecutor Manjula Rao and thereafter she used to drop me at the guest house,” she points out.

She further added that during this period, she was paid by Teesta through her staff Dhyansingh and Pradip. Yasmeen was kept for 11 months in Room No. 102, at Mariam Apartment, Ismile Katre Road, Bhindi Bazaar."
 

மேலும்

இப்படி நிறைய மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கும் போது கமலஹாசன் என்கிற அறிவு ஜீவி அதிகப்பிரசங்கி முஸ்லீம் ஜால்ரா தட்டுவதற்காகவும், இந்துத்துவம் பற்றி பேசி முற்போக்கு வியாதி என்று தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவும் அந்த பொது ஜன கதாபாத்திரத்தை சொதப்பி இருப்பார்.
அதனால் அந்த படக்காட்சியைப் போடாமல் நஸ்ருதீன் ஷா அருமையாக நடித்திருந்த இந்த காட்சியை இட்டிருக்கிறேன்.
.

7 comments:

saravana kumar said...

கழகங்கள் இரண்டுமே ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள் தான். கருணா நிதிக்கு அரசியல் செய்ய வாய்ப்பே தரக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் மட்டுமே ஜெயலலிதா குறியாக உள்ளார். இட ஒதுக்கீட்டால் பலனடைந்தவர்களே மீண்டும் மீன்டும் பலன் பெறக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் உச்ச நீதி மன்றம் க்ரீமி லேயர் குறித்த நிபந்தனைகளை விதித்தது. ஆனால் நம் அரசியல் வாதிகள் வழக்கம் போல் நீதிமண்றத்தின் கருத்தை அலட்சியம் செய்கின்றனர்.கருணா நிதியின் பேரன்களும் கோயிலில் நாதஸ்வரம் வாசித்து ஜீவிக்கும் ஒரு சாதாரண இசை வேளாளாரின் மகனும் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் இவர்களின் சமூக நீதி போலும். நானும் இவர்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளால் பயணடையும் வகுப்பை சார்ந்த்தவன் தான். இருப்பிணும் இது போன்ற அ நீதிகளை சகிக்கமுடியவில்லை. காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமண்றத்தின் தீர்ப்பை கர்னாடகம் மதித்து அமல் படுத்தவேண்டும் என்று கூக்குரலிடும் இவர்கள் அதே உச்ச நீதி மன்றத்தின் இட ஒதுக்கீடு பற்றிய தீர்ப்பை அலட்சியம் செய்வார்கள்.... நல்ல நியாயம்.....‌
மும்பை குண்டு வெடிப்பை ஆர். எஸ் . எஸ் தான் செய்தது என்ற ''கண்டுபிடிப்பு'' மிக விரைவில் வெளி வரும்.அடுத்த குண்டு வெடிப்பில் நாமும் சிக்கிவிடாமல் இருக்க ஆண்டவனை வேன்டுவோம் [ வேறு வழி ?]

hayyram said...

குண்டு வெடிப்பு விஷயத்தில் நான் என நினைத்தேனோ அதைச் சொல்லி இருக்கிறீர்கள். பாபா ராம் தேவ் தான் காரணம் என்று அவரைத் தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் பெரிய விஷயம்.

RAJA said...

இந்துக்களுக்கெதிராக கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அவதூறு பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். மீடியாக்களும் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக வெளியிடுகிறார்கள். தீவிரவாதிகள் குண்டு வெடித்துக்கொண்டே இருப்பார்கள். இந்துக்கள் சொரணையில்லாமல் அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதே குண்டு வெடிப்பு ஒரு முஸ்லீம் மசுதியில் நடந்திருந்தால் இப்போது எப்படி நடந்து கொண்டிருப்பார்கள். ஏதோ இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பே இல்லாதது போல் ஆர்ப்பாட்டம், கலவரம் என்று பிரச்னையைப் பெரிதாக்கியிருப்பார்கள். ஹஜ் யாத்திரைக்கு பணம் கொடுத்து , ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்து, இடஒதுக்கீடு கொடுத்து ஏதோ அவர்கள் நாட்டுக்கு மகத்தான தொண்டு செய்வது போல் ஆதரித்துக்கொண்டு இருந்தால் இப்படித்தான் நடப்பார்கள். நாம் பெரும்பான்மையினராக இருக்கும்போதே நமக்கெதிராக இவ்வளவும் செய்கிறார்களே. நாம் சிறுபான்மையாகி விட்டால் நம் கதி அதோகதிதான்
முஸ்லீம், கிறிஸ்தவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் உங்கள் தொண்டு தொடரட்டும்.

Arun Ambie said...

அந்நியர் மறைமுகமாக ஆளும் இந்த ஆட்சி மாறினாலொழிய இந்தியர்களுக்கு உய்வில்லை. இந்தக் கலவரத்துக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று சொன்னாலும் வியப்பில்லை எனும் உங்கள் கருத்தை திக்குவிசயசிங்கர் மெய்ப்பித்துள்ளார். இந்து அமைப்புகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அவரது மருள்வாக்கு மதம் கொண்டு அரசியல் விளையாடுவோர்க்கு நிச்சயம் வேதவாக்காகும்.

hayyram said...

ஆம் அம்பி, குண்டு வெடிக்காமல் பாதுகாக்க வக்கில்லை. உடனே இந்து அமைப்புகள் மீது பழி போட துடிக்கிறார்கள். இவ்வளவுக்கும் காங்கிரஸ்காரர்களும் இந்துக்கள் தானே. பின் ஏன் இந்தக் கொலைவெறி என்று தெரியவில்லை.

Jayachandran said...

அட போங்கையா நான் 22 வயதான ஒரு இளைஞன். ஆளாளுக்கு இப்படி பதிவு எழுதி கடைசியில பைத்தியம் பிடிக்க வச்சுடுவீங்க போல இருக்கு. யார நம்புறதுன்னே தெரியல, நல்ல வழிகாட்டுதலும் இல்ல..

பின்குறிப்பு: சட்டைய பிச்சுக்குட்டு உங்க வீட்டு பக்கமா யாராவது வந்த கொஞ்சம் சோறு போட்டு அனுப்புங்க அது நானா இருந்தாலும் இருக்கும்...

hayyram said...

ஜெயசந்திரன், நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் உங்களுக்கு சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலை வரவே வராது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.