Sunday, February 28, 2010

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!


"நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய். புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய்.

உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது. வலிமையைத் தருகிறது. உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வலவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது."

ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் லட்சியம், 'மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது' என்பது தான். மேலும், 'கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?' இதுவே வேதாந்தம் கூறும் அறிவுரையாகும்.


நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆக வேண்டும். நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறாய். ஆனால் அதை நீ அறியாமல் மட்டுமே இருக்கிறாய். இதை நீ உணரவே வேண்டும்.

உன்னிடமுள்ள தெய்விகத் தன்மைதான், 'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்' என்பதற்கு உரிய சான்றாகும். நீ கடவுளாக இல்லாவிட்டால் கடவுள் என்ற ஒருவர் இருக்கவில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை. இந்த உண்மையை வாழ்வில் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதையே வேதாந்தம் கூறுகிறது.

கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை. உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறாய்.

மனித உடலில் உள்ள மனித ஆன்மா ஒன்று தான் வழிபட வேண்டிய ஒரே கடவுள் ஆகும்.

- சுவாமி விவேகானந்தர்.

4 comments:

Paarvai said...

Where we can buy swami vivekanandar books in tamil? I am from canada.

Unknown said...

//Where we can buy swami vivekanandar books in tamil? I am from canada.//

Hi Paarvai,

Branches of Sri Ramakrishna Math is spread all over the world. Log in to its website and try to find out.

ISR Selvakumar said...

உங்கள் பதிவுகளை இனி தொடர்ந்து வாசிப்பேன். நிறைய எழுதுங்கள்.

Paarvai said...

// Mohen said...

Hi Paarvai,
Branches of Sri Ramakrishna Math is spread all over the world. Log in to its website and try to find out.

//

Thanks a lot. There are a lot of books. Once again thanks.