Tuesday, September 13, 2011

பதின் வயது திருமணம் குற்றமா? - 2



"நள்ளிரவில் தோட்டத்து சாலையில் புகுந்த ஒடிசா வாலிபர்கள் 4 பேர், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியுடன், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள முயன்றனர்."

மேலே காணும் செய்தி பல சமூக கலாச்சார சிதைவுகளை எடுத்துச் சொல்லக் கூடிய விஷயம். ஆனால் இதைப் பற்றி கலாச்சார ரீதியாக விவாதிக்க, தீர்வு காண யாரும் தயாரில்லை என்றே தோன்றுகிறது. காரணம் இது போன்ற சமாச்சாரம் பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

காமம் என்பதும் பசி, தாகம், காலையில் எழுந்தால் கழிவறை போகவேண்டியது போன்றதுமான ஒரு உடலின் உந்துதல் தான். வயிற்றுக்குச் சோறும் , நாவிற்கு தண்ணீரும் கொடுப்பது போல, காலை எழுந்தவுடன் உந்துதல் வந்து கக்கூஸ் போவது போல காமத்தின் உந்துதல் வந்தால் அதனை கழிவு செய்து விடுதலும் இன்றியமையாத அவசியமே!

ஆனால் அதை மிகவும் அலட்சியமாக நம் சமூகம் கையாண்டு வருகிறது. பதின் வயது என்பது சக மிருகங்களுக்கு இருப்பது போல மனிதர்களுக்கும் இனச்சேர்க்கைக்கான வயது. நம் முன்னோர்கள் அந்த வயதின் முக்கியத்துவம் கருதி பதின் வயதில் - ஆண் பெண் இனக்கவர்ச்சி உண்டாகும் சரியான பருவத்தில் - திருமணம் செய்து வைத்தனர்.

ஏழுவயதில், ஐந்து வயதில் திருமணம் செய்து வைத்து பருவத்திற்காக காத்திருப்பதும் நடந்திருக்கிறது அக்காலத்தில். அது கொஞ்சம் அதிகம்தான். அறியாமையால் வந்தவை. ஆனால் அந்த இனச்சேர்க்கைக்கான வயதை இன்றைக்கு முற்றிலுமாக புறந்தள்ளுகிறது நம் சமூகம்.

இனச்சேர்க்கைக்கான சரியான பருவத்தில் மனிதர்களை உடலுறவு கொள்ளவிடாமல் கலாச்சாரம், ஒழுக்கம் என்று கட்டிப் போட்டு விடுகிறோம்.
படிப்பு பணம் சம்பாத்தியம் என்கிற பெயரிலும் அதையே செய்கிறோம். இது ஒரு பெரிய மனிதக்கொடுமை. உடலுறவுக்கான எந்த வடிகாலும் இனச்சேர்க்கை பருவத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் கொடுபப்தும் இல்லை.

பள்ளிப்பிள்ளைகள் உடலுறவு கொள்வதைத் தூண்டும் வகையில் 'காண்டோம்' விளம்பரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. வீட்டிற்குத் தெரியாமல்
இக்காலத்தில் சில யுவன்களும் யுவதிகளும் வெளியே உடலுறவு கொண்டு சுகம் கண்டு திரும்புகின்றனர். வீட்டுக்கு வந்தால், ஒன்றும் தெரியாத பிள்ளைகள் போல அம்மா, அப்பாவிடம் கொஞ்சிப்பேசி நல்ல பிள்ளைகளாக நடிக்கவும் செய்யலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே பிள்ளைகள் என்னவாக
இருக்கிறார்கள் என்பதை நம்மால் கவனிக்க முடியுமா?

அப்படியே அவர்கள் திருமணம் என்கிற கலாச்சார வழியைப் பின்பற்றாமல்
திருட்டுத்தனமாக ஆனால் வயதிற்குத் தேவையான உடலுறவை வீட்டிற்கு வெளியே ரகசியாமாக செய்துவிட்டு வந்தால் நமக்குத் தெரியாமல்
அனுபவித்துக் கொள்கிறார்கள், விட்டு விடுவோம் என்று விடலாமா?

அது சரியா?

அது சரி என்றால் வெள்ளையர்களின் வாழ்க்கையை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டோம். இனச்சேர்க்கைக்கான வயதின் வடிகால்
நம் மனிதர்களுக்கும் கிடைத்து விடுகிறது. இயற்கைக்கு மாறாக மனிதன் கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொள்ளலாம். பிறகு திருமணம்
கலாச்சாரம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

அது தவறு என்றால் இனச்சேர்க்கைப் பருவத்திற்கான வடிகால்களை இளைஞர்களுக்கு எவ்வகையில் வழங்குகிறோம்? கலாச்சாரம் என்கிற
பெயரிலும் ஒழுக்கம் என்கிற பெயரிலும் இனச்சேர்க்கைப் பருவத்தில் உடலுறவு கொள்வதை தடுத்துவைப்பது மனித படைப்புக்கு எதிரான
செயல் இல்லையா? படிப்பு , பணம், உத்தியோகம் என்கிற பெயரிலும் அதே தானே நடக்கிறது?

இதற்கு என்ன தீர்வு? ஆளுக்கொரு கன்றுக்குட்டியையாவது கொடுத்து உடலுறவு கொள்ளுவதற்கு அனுமதி கொடுத்தால் சரியான தீர்வாக
இருக்குமா?

மேலே இடப்பட்ட செய்தியில் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு அவர்களை காம கொடூரர்களாக சித்தரிக்கப் பார்க்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்காமல் கன்றுக்குட்டியுடன் முடித்துக்கொண்ட இவர்களது 'நாகரீகத்தைக்' கூட நம்மால் பொறுக்கமுடியவில்லையென்றால், அந்த வயதில் உடலுறவுக்கு என்ன வழி?

செய்தியில் உள்ள இளைஞர்கள் கூட்டமாக ஒரிசாவிலிருந்து இங்கே வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள். அதனால் அவர்களுக்கு சரியான வடிகால் கிடைக்கவில்லை என்று நாம் உச்சுக்கொட்டலாம். அப்படியென்றால் பெற்றோருடன் தங்கியிருக்கும் இனச்சேர்கைக்கு ஆசைப்படும்
இளைஞர்களுக்கோ, யுவதிகளுக்கோ நாம் என்ன வடிகால் வைத்துக் கொடுத்திருக்கிறோம்?

செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர்களின் வயதினருக்கு இனச்சேர்க்கையின் பிரச்சனை இந்தளவிற்கு இருக்குமானால் அதே வயதுள்ள நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் அதே உந்துதல் இருக்குமல்லவா? இவர்களை காமக் கொடூரர்கள் என்று கூறிவிட்டால் போதுமா?

இந்த விஷயத்தில் நாம் ஏன் நம் முன்னோர்களைப் பின்பற்ற வெட்கப் படுகிறோம்? ஏன் வெளிப்படையாக பேச, இனச் சேர்க்கைப் பருவத்தில்
உடலுறவு தேவை என்பதை ஆதரிக்க மறுக்கிறோம்?

பதின்வயதில் உடலுறவுத தேவைப்படும் இனச்சேர்க்கைப் பருவத்தில் திருமணம் செய்து, பருவத்தே அதை அனுபவித்த நம் முன்னோர்கள் அறிவிலிகளா? அதை ஏன் நாம் இழந்தோம்?

நம் வீட்டுப் பிள்ளைகள் திருட்டுத் தனமாக உடலுறவு கொள்வதை நாம் ஊக்குவிக்கிறோமா? அனுமதிக்கிறோமா? முறையாக பருவத்தில் இனச் சேர்க்கையில் ஈடுபட இந்த தலைமுறைக்கு என்ன வடிகால் செய்திருக்கிறோம்? என்ன வழி?

ஆண்களுக்கு அவரவர் உள்ளங்கையும், பெண்களுக்கு ரப்பர் குழாயும் கொடுத்துவிடுவது சரியான வழியாக இருக்குமா? கலாச்சாரமும் கெடாமல்
ஒழுக்கமும் மீறாமல், உடலின் உந்துதலும் தனிந்துவிட்டதாக கலாச்சார ஆர்வலர்கள் மகிழ்ந்து கொள்ளலாமா?

இதைப்பற்றி சிந்தித்து அவரவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே உரிய வடிகால்களை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம் என்று சிந்தித்தால் நன்மை பயக்கும் தானே.

அவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் சிந்திக்கும் போது தானாகவே பாதுகாப்பான உடலுறவு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்க எல்லோர் வீடுகளிலும் ஏற்பாடாகும். அதன் பெயர் திருமணம் என்றாகும். அது பதின் வயதில் நடந்தேறும். நம் தாத்தா பாட்டி என்ன காரணத்திற்காக பதின் வயதுகளில் திருமணம் செய்தார்களோ, அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்குச் செய்து வைத்தார்களோ அது மீண்டும் நடக்கும்.

வயது காரணமாக பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே தவறிழைப்பதும் தடுக்கப்படும். பருவத்தின் உறவு சுகத்தை இயற்கைக்கு மாறாக அனுபவிக்காமல் இழப்பதும் தடுக்கப்படும்.

எச்சரிக்கை: - ஆயிரம் காரணங்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் பற்றி ஆய்ந்தாலும் சகல ஜீவராசிகளுக்கும் இனச்சேர்க்கைக்கென்று ஒரு பருவம் இருக்கிறது. அதே போல் மனிதர்களுக்கும் ஒரு பருவம் இருக்கிறது. அந்தப் பருவத்தில் இனச்சேர்க்கை தடைபடுவது அப்பிறவியையே வீனடிக்கும் செயலாகும்.

'என் மச்சனுக்கு மயிலப்பசுவு தோதாச்சு' என்ற கிழக்குச் சீமையிலே படப்பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது.
பாடலின் முதல் வரி 'ஆத்தங்கரை மரமே'

மேலும் படிக்க க்ளிக்கவும் ---> பதின் வயது திருமணம் குற்றமா? பாகம்-1

.

No comments: