Sunday, April 5, 2009

கீதோபதேசம்


அர்ஜுனன் சொன்னது:  

பகவானே சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவர். நீங்கள் சூரியனுக்கு பிறகு பிறந்தீர்கள். முதலில் நீங்கள் சூரியனுக்கு அழிவற்ற‌ யோகத்தை உபதேசித்ததாக கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது.  

ஸ்ரீ கிருஷ்னர் உபதேசம்:  

அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.  

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன் இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் அவதாரம் செய்கிறேன்.  

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.  

நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.  

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.  

காமம் (ஆசை), பயம் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.  

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

2 comments:

Paarvai said...

When krishna going to come save our Eelam tamils???

hayyram said...

ஈழதமிழர்கள் கண்ணனை நம்பாமல் தமிழ் நாட்டிலிருக்கும் கயவர்களை அல்லவா நம்பினார்கள்.