Saturday, April 10, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள் நசுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்றுபோகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வந்து சேரும்; உதவி வந்து சேரும்; அசைக்கவே முடியாத உறுதியான வலிமை வந்து சேரும்.


உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவு, முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு. உன் விதியில் நீ நம்பிக்கை கொண்டிரு. அது, கையில் காசில்லாத உன்னை நம்பித்தான் இருக்கிறது. 


கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரப்புங்கள். செயலாற்றுங்கள்! செயலாற்றுங்கள்! வேலை செய்யும்போது ஒரு வேலைக்காரனைப் போல இருங்கள். சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். எல்லையற்ற பொருமையைக் கடைபிடியுங்கள். வெற்றி உங்களுடையதே!


கவனமாக இருங்கள். உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருங்கள். மெதுவாகவே என்றாலும் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி.


இன்றைய இளைய தலைமுறைகள் நவீன தலைமுறைகளான உங்கள் மீது தான் எனது நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக்கருத்துக்கள் பரவும் வரையிலும் , என் மீது பேரண்புகொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே செல்வார்கள்.


மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மை குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.


எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது நல்லதை விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.


- சுவாமி விவேகானந்தர்.



7 comments:

Geetha6 said...

good post

Siva said...

good work ,keep it up.

Meena said...

Bitter truth...Motivating...

ira kamalraj said...

hindu matham enbathu manoviyalum ariviyalum aagum. yes

hayyram said...

thanks for comming and commenting geetha6, siva, meena and ira kamalraj. thanks a lot

Grandhihvacr said...

sundar said....

am new to ths blogspot,but ur post r
inducing good thoughts.continue.u rock one day

hayyram said...

thanks sundaresan. u r welcome