Wednesday, February 3, 2010

கிறிஸ்தவர்கள் தொல்லை தாங்கலடா சாமி!

இதுதான் அந்த கோவிலாம்!


இன்றைய தினமலர் செய்தி!
________________________________________________________________
செஞ்சியில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ள இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.

இந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் பேரழிவை சந்தித்தன.இதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன.ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
சீத்தாராமர் கோவிலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன.

500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடக்காமல் இருந்த காலத்திலும், இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும், சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்தது.இந்த கோவிலில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கிறிஸ்தவர்கள் தரப்பில் 1878ல் திண்டிவனம் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆதாரமாக காட்டி உள்ளனர்.இந்த பத்திரத்தில் கோதண்டராமர் கோவில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை மயிலம் தேவஸ்தான ஆதினம் பரம்பரை தர்ம கர்த்தா சிவக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு யெப்டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியுள்ளார்.இதே பத்திரத்தில் மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பதாக இந்துக்கள் தரப்பில் கூறுகின்றனர். பத்திரப் பதிவின் போது மடத்தினர் இந்த சொத்தை கிரயம் பெற்றதற்கான மூலப்பத்திரமும், கோவில் நிலத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டி பத்திரமும் இணைத்து வழங்கியதாக கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த இரண்டு பத்திரத்தையும் கிறிஸ்தவர்கள் தரப்பில் சமாதானக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்திற்கு சமீபத்தில் எடுத்த வில்லங்க சான்றிதழில், 1878ல் நடந்த கிரயத்தை தவிர வேறு சொத்து பாரிமாற்றம் நடக்கவில்லை. இதற்கிடையே கோவில் இடத்திற்கான பட்டா காண்டியார் என்பவர் மீது மாற்றப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் இருந்த கோதண்டராமர் கோவிலை மீண்டும் கட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான வேலைகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முன்தினம் கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடக்க உள்ள சமாதானக் கூட்டத்தில் எடுக்க உள்ள முடிவிற்காக இரண்டு தரப்பினரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.

கோவில் இடத்தை காட்டும் எழுத்துக்களை அழித்துள்ளதாக புகார் : அரசு வரைபடத்தில் கோதண்டராமர் கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆலய அறக்கட்டளை தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை நிறுவி கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ரங்கராமானுஜதாசர் கூறியதாவது:தாலுகா அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்துள்ள கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்தின் மூலப்பத்திரமும், டிரஸ்டி பத்திரமும் கேட்டு தாசில்தாரிடம் மனு செய்தும் இதுவரை சமர்ப்பிக்க வில்லை. இந்த பத்திரங்கள் கிடைத்தால் தான் கோவிலை விற்பனை செய்யும் உரிமை விற்பனை செய்தவருக்கு உள்ளதா என்பது தெளிவாகும். இதில் டிரஸ்டிகளாக இருந்தவர்கள் விவரமும் தெரியவரும்.

கிரயத்திற்கு பிறகு இன்றைய நாள் வரை எந்த சொத்து பரிமாற்றமும் நடக்காத நிலையில் எந்த அடிப்படையில் காண்டியார் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு கடந்த மாதம் 4ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால், இதுவரையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வில்லை.அரசிடம் உள்ள நிலத்தின் வரைபடத்தில், கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருந்த எழுத்துக்களை சமீபத்தில் வெள்ளை மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
_________________________________________________________________

திருப்பதி ஏழுமலையும் கிறிஸ்தவர்களுடையது என்று வழக்கு தொடுத்தார்கள். இப்போது செஞ்சியில், நாளைசபரிமலையும் ஏசு வாழ்ந்த இடம் என்பார்கள் போலும். பின் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கூட மேரியம்மா கோவில் என்று தஸ்தாவேஜுகளை காட்டுவார்களோ?

இத்தாலி ராணி டில்லியிலும் துலுக்க ராஜா சென்னையிலும் ஆட்சி செய்தால் இந்துக்கள் சொந்த பூமியில் அகதிகளாவதைத் தவிற வேறு வழியில்லையோ! பகுத்தறிவு என்ற பெயரில் காட்டப்படும் இந்து துவேஷம்இந்துக்களை அழிப்பதற்கு பெரும் உதவியாக மற்றவர்களுக்கு இருக்கிறது.

தமிழர்களே! இந்து துவேஷத்திற்கு பகுத்தறிவு என்று பெயரிட்டு உங்கள் கைகளாலேயே உங்கள் கண்ணை குத்தி வேடிக்கை பார்க்கும் திராவிட மாயக்காரர்களிடமிருந்து வெளியே வரவில்லையென்றால் நாளை உங்கள் புதல்வர்கள் இத்தாலியின் அடிமைகள் என்பதை மறவாதீர்கள்!

ஈஸ்வரோ ரக்ஷது!

34 comments:

வழிப்போக்கன் said...

எச்சரிக்கை மணி அடித்துள்ளீர்கள்.
இந்துக்கள் - தமிழகப் பகுத்தறிவியாதிகளால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்துக்கள் - ஏற்கனவே செவிடர்களாகிவிட்டனர். காது கேட்கவே இல்லை. வாயும் ஊமையாகி விட்டது. எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசோ கோணலாய் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது.
ஊதிக்கொண்டே இருப்போம். விடியும்போது விடியட்டும்.
வழிப்போக்கன்

hayyram said...

நன்றி வழிப்போக்கன் சார். நம் மக்கள் எப்போதான் விழிச்சிக்க போறாங்களோ! அரசாங்கமே இந்துவுக்கு எதிரா இருக்கு என்ன செய்ய?

Anonymous said...

Nandri Thiru.Ram Nan Morning post senchen..neenga atha vilakama pathuvu senchu teenga... evolo nalaiku thaan nama porumaiya irukurathu....

hayyram said...

//Anonymous//

அது சரி..நீங்க யாரு?

மகா said...

great post....but this people never learn lesson..

Anonymous said...

If this situation continuous then how the hindu people'll survive?All the people were loss self respect about our religion.In Tamilnadu all politician made people fool. When'll all people give voice against this type of stupidity.Oh god please save us!!!!!!!!!

அ. நம்பி said...

//அரசாங்கமே இந்துவுக்கு எதிரா இருக்கு என்ன செய்ய?//

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பக் கொளல்.

இதனைத்தான் செய்யவேண்டும் ஐயா.

Anonymous said...

intha udambuku enathu thai thanthai veitha peyar swamirajan, unga pathivai na daily padipen. neenga innum niraya eluthanum nu ellam valla iravanai vendugiren.Nandri.

hayyram said...

//intha udambuku enathu thai thanthai veitha peyar swamirajan..//

நல்ல பெயர் தான் வைத்திருக்கிறார்கள் சுவாமிராஜன். உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள் நிறைய பேசுவோம்.

hayyram said...

thanks for opinion mr.nambi.

அ. நம்பி said...

திருத்தம்:

வாய்ப்பக் கொளல் - வாய்ப்பச் செயல்

Tired of Secularism said...

I appreciate your effort. It's a crap shoot anyway. A large section of Hindus are masochists. Do you think these people will learn what they didn't learn in the past 1000 years?

PS: I really enjoyed reading Vikramaadhithan stories. Keep 'em coming. Nostalgia and all that, you know. :)

Anonymous said...

Nandri...Thiru Ram..Na 6 mathama daily vanthututhanga iruken...comments thaan seiurathu illa...unga blog ennoda friends niraya peru ku solli iruken...athula 3peru unga list la yerkanavey irukanga.

hayyram said...

thanks mr.Tired of Secularism.. and we too..

//Do you think these people will learn what they didn't learn in the past 1000 years? //

ofcourse...in north lot of people following hinduthva openly..

but in TN and other people are still blind. they hv to understand politician's bad moves and comeout of first is important expecially like itally queen sonia... and karunanithi .

hayyram said...

//unga blog ennoda friends niraya peru ku solli iruken...athula 3peru unga list la yerkanavey irukanga.//

thanks swami and u r always welcome.

hayyram said...

//நோய்முதல் நாடி //

அம்பி சார். நோய்க்கான முதல் எதுன்னு கரெக்டா சொல்லுங்க பாக்கலாம்.

Tired of Secularism said...

Hayram; not exactly. If North Indians are so open to the philosophy of Hindutva why do we see Congress getting elected again and again? The truth is that only a small number of people are true Hindus - may be a few million. The rest are poor people who simply do not care about religion, liberal idiots (the type of people that JNU and Jamia Milia produce)and Commies.

This, as they say, is Kaliyugam. These things are bound to happen anyway. Unless things change drastically, I predict a dark and gloomy future for the Hindus in this country. I hope my prediction does not come true. :(

hayyram said...

//why do we see Congress getting elected again and again?//

yes...point.

இந்த விஷயத்தில் பார்த்தால் இந்துக்களை வெவ்வேறு அரசியல் வாதிகள் வெவ்வேறு காரணங்களைக் கூறி பிரித்தே வைத்திருக்கிறார்கள். அவர்கள் இந்து என்ற பெயரால் ஒன்று பட்டுவிட்டால் இவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதே உண்மை. தமிழ் நாட்டில் பாருங்கள். நாத்திகம் என்ற பெயரிலும் ஜாதி என்ற பெயரிலும் ஓட்டைப் பிரித்து நாசம் செய்துவிடுகிறார்கள்.

கடந்த முறை அத்வானி பிரதமராக பி ஜெ பி யில் அறிவித்த பொழுது இந்து அரசியல் வாதிகள் ஜெயலலிதா உட்பட அனைவரும் பிஜெ பி யை புறம் தள்ளி வெவ்வேறு மூன்றாவது அணி என்ற லூசுத்தனத்தை செய்ததால் காங்கிரஸுக்கு வாய்ப்பானது. இந்து அர‌சிய‌ல் வாதிக‌ளே தொழில் ரீதியாக‌ முஸ்லீம் ஓட்டுக்காக‌ ந‌ம‌து வாக்குக‌ளைப் பிரித்து விடுகிறார்க‌ள். இத‌னால் ம‌க்க‌ள் நினைத்தால் கூட‌ விரும்பிய‌ க‌ட்சியை ஆட்சியில் அம‌ர‌வைக்க‌ முடியாத‌ நிலை இருக்கிற‌து. கூட்ட‌னி சித்தாந்த‌ம் ஒழிக்க‌ப‌ட்டால் தான் ம‌க்க‌ள் நேர‌டியாக‌ விரும்பிய‌ க‌ட்சிக்கு வாக்க‌ளிக்க‌ முடியும்.

இதெல்லாம் போக‌ இந்துத்துவா பேசிய‌ சிவ‌சேனா இன்று ம‌ராத்தித்துவாவாக‌ சுருங்கி விட்ட‌து. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் அற்ப‌மாக‌வும் ம‌க்க‌ளிட‌ம் எரிச்ச‌லும் உண்டாக்கும் வ‌கையாக‌ இருப்ப‌து காங்கிர‌ஸுகு சாத‌க‌மாக‌வே போய் விடுகிற‌து. இதையெல்லாவ‌ற்றையும் தாண்டி இந்துத்வ‌ம் ஜெயிக்க‌ ம‌க்க‌ளிட‌ம் அடிப்ப‌டையில் இந்துக்க‌ளைச் சுற்ரி ந‌ட‌க்கும் சூழ்சிக‌ளைப் ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வை உண்டாக்குவ‌தே அவ‌சிய‌ம். அது தான் ஒரே வ‌ழி.

ந‌ம்மால் முடிந்த‌தைச் செய்வோம்.

அ. நம்பி said...

//அம்பி சார். நோய்க்கான முதல் எதுன்னு கரெக்டா சொல்லுங்க பாக்கலாம்.//

`நோயின் முதல் எது' என்று நீங்களே சரியாகச் சொல்லிவிட்ட பிறகு என்னை ஏன் கேட்கிறீர்கள் ஐயா?

//அரசாங்கமே இந்துவுக்கு எதிரா இருக்கு//

இது நீங்கள் சொன்னதுதான்!

(அ. நம்பி என்னும் என் பெயரை என் இசைவு இல்லாமலேயே அம்பி என்று மாற்றியதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்!)

Unknown said...

Your'e right, Tired of Secularism. Here, majority of the people are much worried about how to earn their daily bread or idly vadai sambar or chappati. They hardly have any concern for religion, culture, caste etc., And, they are ready to indulge in any kind of sacrileges in order to make a living.

In today's " Kaliyugam " as you have mentioned, the popular saying, " Kudi uyara kone uyarvaan " has become topsy-turvy. And all the " drastic " change has to come only from our politicians.

India should immediately get a good national leader who knows & respects his roots and is ready to sacrifice anything to protect our values from the clutches of the evil and to show the right path to our youngsters.

hayyram said...

///(அ. நம்பி என்னும் என் பெயரை என் இசைவு இல்லாமலேயே அம்பி என்று மாற்றியதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்!)///

ஆத்தாடி அப்டியா மாத்தீட்டேன்! தெரியாம நடந்து போச்சு ராசா! இதுக்கெல்லமா கெசு போடுவாங்க‌. நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லீங்கயா! எப்டியெல்லாம் சிக்கிகிறேன் பாத்தீங்ளா! ஆவ்வ்..

hayyram said...

thanks for coming mr.mohen..

//India should immediately get a good national leader//

among all the politician..can u suggest any one all over india...?

Tired of Secularism said...

Hayram; Advani could have been that man. But he damaged his image by blabbering nonsense like 'Jinnah was a secular man, etc'. Modi is another man who is just as good, but his image has been damaged by our 'secular' media. Arun Shourie is another man, but he is too much of an intellectual and he hardly mingles with the masses. We'll have to wait and see.

hayyram said...

yes mr.tired of secularism...(me too)

U are right. but still i hope modi..to come up in future in B.J.P. he is not at all bother about media. but i don no y he is keeping quiet after all this bla blas hapening in BJP now a days. I thing he is waiting for a right time to take over BJP. till the time as u said...we'll hv to wait and see.

Anonymous said...

Thiru Raam, inraiya dinamalar nalithalin seithi http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538 ungal paarvaiku... nandri,swami

hayyram said...

thanks swami ji.

//இதில் காஞ்சி கண்ணன் பேசுகையில், இந்து கோவில் என்பதற்கு மண்டபங்கள், ராஜகோபுரம், கருவறையே சாட்சி. இந்து கோவில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. இதை வாங்கியதும், விற்பனை செய்ததும் செல்லாது. கோவிலை பூட்டியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவில் இடத்திற்கான அரசு ஆவணங்களை முறைகேடாக திருத்தி உள்ளனர். இதை ஆய்வு செய்து திருத்தியவர்கள் மீது தேசிய ஒழுங்கு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்தின் மூலப்பத்திரம், டிரஸ்டி பத்திரத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. இப்போது பட்டாவில் உள்ள காண்டியார் என்பவர் யார், அவரின் தந்தை பெயர் என்ன? கிரயம் பெற்ற டாரூசுக்கும், காண்டியாருக்கும் என்ன உறவு, என கேள்வி எழுப்பினார்.அடுத்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் நடந்த கூட்டத்தில், அவர்கள் தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்துக்கள் தரப்பில் இந்து கோவில் தான் என்பதற்கும், அதில் தங்களுக்கு உள்ள உரிமைக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றார்.பங்கு குரு ஜோசப் ஆல்பர்ட் பேசுகையில், காண்டியார் என்பது பிரெஞ்ச் பெயர், செஞ்சி செயின்ட் மிக்கேல் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர். இவரது கல்லறை சர்ச்சின் பின்புறம் உள்ளது.


காண்டியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்யக் கோரி 2000வது ஆண்டு, செஞ்சி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டில் 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் சொத்தில் பிரவேசித்தவர்களை தடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சமாதானக் கூட்டம் தேவையில்லை. சொத்துக்கான ஆதாரத்தை கொடுத்துள்ளோம். சொத்தை எங்களிடம் ஒப்படையுங்கள். கிரய பத்திரத்தை தவிர வேறு மூலப் பத்திரங்கள் கிடையாது.முதல் கூட்டத்தில் கோவிலுக்கு இடம் ஒதுக்கித் தர அவகாசம் கேட்டோம். இப்போது அதை தரமுடியாது. வேண்டுமானால் மார்க்கெட் மதிப்பிற்கு கிரயம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.பிறகு உள்ளூர் பிரமுகர்களை கொண்டு நடந்த மூன்றாவது கூட்டத்தில், இரு கூட்டங்களிலும் என்ன கோரிக்கை விடுத்தனர் என்பது குறித்து முழுமையாக அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.


இரண்டாவது கூட்டத்தில், பத்திரத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில் அது உண்மையானது என்று தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்தனர். இந்துக்கள் வழிபாட்டிற்கு கோரிக்கை விடுப்பது பற்றி கிறிஸ்தவர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்று பொறுப்பை கிறிஸ்தவர்கள் மீது அரசு அதிகாரிகள் திணித்தனர். அவர்கள் தங்களின் பேராயரை கேட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். அதற்காக 10 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அவகாசத்தை வழங்கி 15ம் தேதிக்கு கூட்டத்தை, சப் -கலெக்டர் மஞ்சுளா ஒத்தி வைத்தார்.இரண்டு நாளில் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிப்பதாக கூறித்தான் தாசில்தார், கோவில் சாவியை வாங்கினார். 15ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடத்தாமல் மூடிவைக்க முடியாது. வழிபட்டிற்கும், அபிஷேகம் செய்யவும் கோவிலை திறந்து விட வேண்டும் என, இந்துக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.இது குறித்து கிறிஸ்தவர்கள் கருத்தை கேட்காமல், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சப்- கலெக்டர் மஞ்சுளா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்களின் ஒரு பகுதியினர் வெளிநடப்பு செய்தனர்.//

3 வருடங்கள் நிலத்தை உபயோகித்தாலே அவர்களுக்கு அந்த நிலத்திற்கான பட்டா வழங்கப்படும் என்று தி மு க சட்டம் கொண்டு வந்திருக்கிறது.. அதை வைத்துப் பார்த்தால் கூட நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்துக்களிடம் இருக்கும் கோவிலை இந்துக்களுக்கே கொடுக்க பட்டா கொடுத்து விடலாமே. சமாதானக்கூட்டம் என்ற பெயரில் கும்மி அடிக்கிறார்கள். என்ன தான் நடக்குமோ பார்க்கலாம்.

hayyram said...

//செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : கிறிஸ்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த செஞ்சி வக்கீல் பூபதி கூறுகையில், "பீரங்கி மேட்டை சேர்ந்த கணேசன் சார்பாக, கடந்த 2000ம் ஆண்டு இந்து கோவில் உள்ள இடத்தின் பட்டா, கிறிஸ்தவரான காண்டியாருக்கு கொடுத்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கில் கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., காண்டியார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். வழக்கு நடந்த ஐந்து ஆண்டும் எந்த அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்ற தகவலை அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் ஆஜராகவும் இல்லை.காண்டியார் தரப்பில் சம்மனை இறுதிவரை பெறவில்லை. பேப்பரில் விளம்பரம் செய்து எக்ஸ் பார்ட்டியாக வழக்கு முடிய வேண்டிய நிலையில், வழக்கு தொடர்ந்த கணேசன் உடல் நலம் இல்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர், வழக்கில் ஆஜராகாமல் போனதால் வழக்கை தள்ளுபடி செய்தனர். வழக்கில் சம்மன் அனுப்பிய தொகையைத்தான் அவரிடம் வசூலிக்க உத்தரவிட்டனர். இது அபராதம் கிடையாது. கிறிஸ்தவர்கள், மயிலம் ஆதினத்திடம் இருந்து 1878ல் கிரயம் பெற்று இருந்தாலும் செஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2000ம் ஆண்டு வரை இதை அனுபவித்ததற்கான ஆதாரம் கிடையாது.


கிரயம் பெற்று இருந்தாலும், கிரயம் பெற்றவர் வேறு, பட்டா பெற்றவர் வேறு. கிரயப்பத்திரத்திலோ, பட்டா ரசீதிலோ கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்று எந்த ஆதாரமும் கிடையாது.கிரையம் வாங்கியவர் தனிப்பட்ட நபர். அவரின் வாரிசுகள் யாரும் இதில் உரிமை கோரவில்லை. சொத்து யாருக்கு என்றும் அவர் எழுதி வைக்கவும் இல்லை.காண்டியார் பெயரில் பட்டா வழங்கி இருந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி எடுக்க வேண்டும். (அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்) அதுவும் நடக்கவில்லை. இந்த சொத்தை, கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை' என்றார்.//

சுதந்திரம் பெற்ற பிறகு மன்னர்களின் நிலங்கள் எல்லாம் அரசு நிலமாக ஆனபோதே இந்த செஞ்சி மன்னராட்சி நடந்த இடங்களும் அரசு நிலம் தானே என்று அரசு ஒரேயடியாக சொல்லலாமே! அதற்கு அரசாங்கம் தயாரில்லை. மேலும் தொல்லியல் ஆராய்ச்சி துறை கையகப்படுத்திய பழங்கால கோவிலில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதையும் அரசு நேரடியாக தெரிவிக்கலாம். ஆனால் அதற்கு தயாரில்லை. மொத்தத்தில் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் இந்துக்களை அடியோடு அழிக்க நினைக்கிறது என்பதே வெளிச்சமாகத் தெரிகிறது.

Anonymous said...

Thiru Raam, Netru senchi Kovilil poojai senchu irukaanga...kaavi kodi ellam kati...ithu thodarnthu nadantha nalla irukum...antha picture podanum nu pathen..ana eppadi nu theriyala...ivolo varisama kovil poojai nadaka villai...ipothu arabithu irukirargal....itharkaga kiruthuvargaluku(pammal K Sambandam stylelil ooovaah endru padikavum) nandri kooruvom. naan sonnathil thavaru irunthal mannikavum. Nandri Swami

hayyram said...

//(pammal K Sambandam stylelil ooovaah endru padikavum)//

வேதனைலயும் காமெடி...

//naan sonnathil thavaru irunthal mannikavum//

ஒரு தவறும் இல்லை. தொடர்ந்து நீங்கள் இந்த விஷயத்தை கவனிக்கும் போது மனதில் எவ்வளவு வேதனை இருக்கிறது என்று தெரிகிறது. இப்படி பல பேருக்கு இருக்கும். சில இந்து அமைப்புகள் கூட இல்லாவிடில் நமக்காக பேச ஆளில்லை. என்ன சொல்கிறீர்கள். நன்றி திரு ஸ்வாமிராஜ்.

Anonymous said...

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இது பற்றி இந்துக்களுக்காக போராடுவதாக மார்தட்டிக்கொள்ளும் பா.ஜ.கவில் இருந்து யாராவது பேசியிருக்கிறார்களா என்று. இல.கணேசன் அறிக்கை விட்டு விட்டால் எல்லாம் முடிந்து விடாது. தென்காசியில் நிகழ்ந்த மதக் கலவரம் என்பது தமிழக அளவில் கூட அதிகமாக பிரபலம் ஆகாத நிலையிலேயே அதை நாடாளுமன்றத்தில் ஏதோ முஸ்லிம்களுக்கு எதிரான கந்தமால் என்பது போல குரல் எழுப்பினார் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பிருந்தா கரத். இதோ போன்ற கோவில்கள் சம்பந்தமாக அத்வானியோ அல்லது சுஷ்மா ஸ்வராஜோ குரல் எழுப்பி இருக்கிறார்களா?

Anonymous said...

anbulla hayyram avarkalukku

ungal katturaikalai vaasippathil mikavum aaevam ullavan enra muraiyil ungalidam sila unmaikalai kooravendiyullathu.

ilangaiyil inru nadakkum sambavankalai paarkkum pothu Sivaboomi enru azhaikkapatta emathu Thamil eelam pouththamayamaaki kondu varukirathu.

Itharkkaana thangal pathil enna.

athevelai emathu mathamum makkalum sirupaanmaiyaakikonde varukiraarkal. itharkaaha emathu saiva aadheenangalum madaathipathikalum oru kuralum kodukkavillai enappadum pothu ithu nasthika vaathikalukku saathakamaaka amainthuvidukirathu.

itharkku thangal pathilai anbudan ethirpaarkkiren.nanri.vanakkam

Sarma

Anonymous said...

anbulla hayyram avarkalukku

ungal katturaikalai vaasippathil mikavum aaevam ullavan enra muraiyil ungalidam sila unmaikalai kooravendiyullathu.

ilangaiyil inru nadakkum sambavankalai paarkkum pothu Sivaboomi enru azhaikkapatta emathu Thamil eelam pouththamayamaaki kondu varukirathu.

Itharkkaana thangal pathil enna.

athevelai emathu mathamum makkalum sirupaanmaiyaakikonde varukiraarkal. itharkaaha emathu saiva aadheenangalum madaathipathikalum oru kuralum kodukkavillai enappadum pothu ithu nasthika vaathikalukku saathakamaaka amainthuvidukirathu.

itharkku thangal pathilai anbudan ethirpaarkkiren.nanri.vanakkam

Sarma

hayyram said...

கருத்திற்கும் கேள்விக்கும் நன்றி திரு. சர்மா! புத்தமதம் கருனை சிந்தனை என்பது மாறு அடையாள மதமாக மாறி விட்டது தான் இலங்கையின் இத்தகைய கொடூரத்திற்கு காரணம். போர் புரிவதில் ஆர்வம் மிக்க சக்கரவர்த்தியான அசோகனே புத்த மதத்தை தழுவி ஆயுதங்களை கீழே போட்டான் என்கிறது வரலாறு. ஆனால் புத்தனின் பேரைச்சொல்லி உயிர்களைக் காவு வாங்கும் நாடு புத்தைனை கேவலப்படுத்துகிறது. அதன் விளைவுகளை தான் நம்மக்கள் சந்திப்பது.

ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் முகலாயர்களும் கிறிஸ்தவர்களும் (இப்போது கூட) தான் ஆண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கடந்து இந்து தர்மமும் அதை வழிபடும் மக்களும் நிலைத்திருப்பதற்கு காரணம் நம் மக்களின் வழிபாட்டு முறைகளும் இன்னும் மாறாத நம்பிக்கைகளும் ஆகும். அந்த நம்பிககைகளை உடைக்கும் வழிகளைத் தான் படாத பாடுபட்டு செய்து பார்க்கிறார்கள் திமுக வின் தொலைக்காட்சிகளும் இதர தொலைக்காட்சி சேனல்களும்.

இந்தியாவில் முகலாயர்களால் கொலை செய்யப்பட்டும் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டும் இந்துக்கள் கொடுமைக்குள்ளாக்கப் பட்டார்கள் எனபது வரலாறு. இந்து வாக வாழ்ந்தாலே வரிகட்ட வேண்டும் என்றும், புனித பயணம் போனால் வரி கட்ட வேண்டும் என்றும் முகலாயர்கள் மதம் மாறத் தூண்டினார்கள். அப்படியும் நம்மக்கள் சாகத் துணிந்தார்களே அன்றி மதம் மாற வில்லை. இந்த மன உறுதியை இலங்கை மக்கள் கொள்ள வேண்டும். இந்துக்கள் புத்தரின் படத்தையும் தம் சாமி படங்களுடன் வையுங்கள். முருகன் சிவன் கோவில்களில் புத்தர் சிலையையும் நிறுவுங்கள். புத்தரின் அஹிம்சை போதனைகளை இந்துக் கோவிலில் இருந்தே போதனை செய்யுங்கள். சிவனுக்கு வழிபாடு செய்வது போல் புத்தனுக்கும் வழிபாட்டு முறைகளைச் செய்யுங்கள். புத்த மதத்தவன் இந்து கோவிலுக்கு வந்து புத்தனை கும்பிடட்டும். புத்த மதத்தவனும் இந்து வாக மாறுவான்.

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், க்ருஷ்ண ஜெயந்தி, மாரியம்மன் திருவிழா என்று எதையும் விட்டு வைக்காமல்
வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுவதால் தான் இன்றைக்கும் இந்துக்களின் உணர்வுகள் பாதுகக்கப்பட்டு வருகிறது. எனவே வெளி நாட்டு வாழ் இலங்கைத் தமிழர்கள் பண்டிகை தினங்களில் இலங்கைக்கு வந்து சொந்த ஊர்க்கோவில்களில் திருவிழாக்களை கொண்டாடுங்கள். கோலாகலமான உங்கள் கொண்டாட்டங்களைப் பார்த்து புத்த மதத்தவனும் ஆசை கொள்வான். புத்தனுக்கும் கொடியேற்றி அம்மன் கோவில் விழாவைப்போல கொண்டாடுவார்கள். வேளாங்கன்னி மாதா கோவிலிலும் கொடியேற்றி கொண்டாடுவதைப் போல.

உணர்ச்சியின் எழுச்சியை போரும் ஆயுதங்களும் மூலம் காட்டாமல் பக்தியும் கொண்டாடங்களையும் உலகம் அதிர நடத்திக் காட்டி அதில் மற்றவர்களையும் சேர்த்து அவர்களின் பிரிவினை வெறியை நீர்த்துப் போகச் செய்யுங்கள். அகிம்சையின் மூலம் கொள்ளும் வெற்றி நிரந்தரம் ஆனது. மனிதர்கள் அடிப்படையில் குழந்தைகள். யாரும் தொடர்ந்து அழுவதற்கும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதற்கும் விரும்புவதில்லை. எனவே ஒற்றுமையை பண்டிகைகளைக் காட்டி கொண்டாடங்களால் ஈர்த்து புத்த பிட்சுக்களையும் சிவ பக்தர்களாக மாற்றுங்கள். நமது தத்துவங்களின் பால் ஈர்ப்பு கொள்ளச் செய்யுங்கள்.

வெள்ளையர்களை எதிர்த்து புரட்சியை உண்டு செய்ய உணர்ச்சியைத் தூண்டிய விழா விநாயகர் சதுர்த்தி. வீட்டுக்குள் இருந்த விநாயகரை தெருவுக்குத் தெரு எழுப்பு ஊர்வலம் கொண்டு போய் பக்தியுடன் புரட்சியையும் வளர்த்தார்கள். அன்னல் காந்தி ஆன்மீக பலத்தை நம்பி தான் அகிம்சை என்ற எழுச்சியை உண்டு செய்தார். நம் தத்துவங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். இறைவழிபாட்டு முறைகளை உலகம் அதிர கொண்டாடுங்கள்.
புத்தன் சிவனாவான். லங்கா புரி நமதாகும். நாளை ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி - வாழ்த்துக்கள். அதை எப்படிக் கொண்டாடினீர்கள் என்று எனக்கு கூறுங்கள். அடிக்கடி வாருங்கள்.நிறைய பேசுவோம். நன்றி.

hayyram said...

திரு. சர்மா!மேலும் மடாதிபதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. அவர்கள் மடத்திஅ நிர்வகிக்கும் தொழிலத்பர்களாகிவிட்டனர். அவார்களுக்கு இந்து மத தத்துவங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வேலை பார்க்க நேரமில்லை. நாத்திகர்களை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை. பெரும்பாலும் தனிமனிதர்களால் துவங்கப்பட்ட அமைப்புக்களே இந்து தர்மத்திர்க்காக போராடி வருகின்ரனர். எனவே வாழும் மக்களாகிய நாமே இதற்கான வேலையில் களமிரங்க வேண்டும். இலங்கையுலும் அதையே நம்மக்கள் செய்ய வேண்டும். அதுவே தீர்வு.