Friday, May 1, 2009

முல்லா நசுருதீன் கதைகள்


ஒரு நாள் முல்லா ஒரு துணிக்கடைக்குச் சென்றார். 

அங்கு தலைப்பாகைகளும் விற்க்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முல்லா அங்கு சென்றார்.  

அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார்.  

பிறகு தலைப்பாகையை தலையில் அணிந்து கொண்டார்.  

அந்த கடையில் அழகான சால்வைகளும் விற்க்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது.  

அதனால் அவர் கடைக்காரரைப் பார்த்து "இந்த தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது?" என்றார்.  

உங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர்.  

முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்துவிட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.  

ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார்.  

"நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாக தானே சால்வையை வாங்கினேன்" என்றார் முல்லா.  

அப்படியானால் தலைப்பாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர்.  

"தலைப்பாகைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேனே" என்று சொல்லி கம்பீரமாக நடையைக்கட்டினார் முல்லா.  

கடைக்காரர் மிகவும் குழம்பிப் போய் விழிக்கத்துவங்கினார்.

No comments: